Skip to main content

"நான் காக்கி சட்டை குடும்பத்திலிருந்து வந்தவன்..." - நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி! 

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

Sivakarthikeyan

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்தியேன் சென்னையில் சமீபத்தில் திறக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்டார்.  

 

அதனைப் பார்வையிட்டுவந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், "காவல்துறை அருங்காட்சியகம் பற்றி சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். கேள்விப்படும்போது காவல்துறை அருங்காட்சியகத்தில் என்ன இருக்கும் என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது; போய் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. நானும் காக்கி சட்டை குடும்பத்திலிருந்து வந்தவன்தான். எனது அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தார். எனவே அந்தத் துறை மீது எப்போதுமே தனி ஈர்ப்பும் பிரமிப்பும் எனக்கு உண்டு.

 

ad

 

நமது ஊரில் காவல்துறை தொடங்கப்பட்டதிலிருந்து, எப்படியெல்லாம் வளர்ந்துள்ளது, அதில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதையெல்லாம் முழுமையாக இங்கு வைத்துள்ளார்கள். அதைத் தாண்டி, பார்க்க வருபவர்களுக்கு அனைத்தையும் அழகாக விளக்குகிறார்கள். அது எனக்கு மிகவும்  பிடித்திருந்தது. நமக்குத் தெரிந்த விஷயமாக இருந்தாலும், அதற்குப் பின்னால் ஒரு புது கதை, புது விஷயம் இருக்கிறது. காவல்துறை அதிகாரியாக வேண்டும் என விரும்புவோர் இந்தக் காவல்துறை அருங்காட்சியகத்தை வந்து பார்க்க வேண்டும். காவல்துறை அதிகாரியாக வேண்டுமென்றால் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற விவரங்களும் ஒரு டிவியில் ஒளிபரப்பாகிறது. இதை பொதுமக்கள் வந்து பார்த்தால், காவல்துறை மற்றும் சிறைத்துறையின் பாரம்பரியம் என்னவென்று தெரியும். பேரிடர் காலத்தில் என்னவெல்லாம் செய்கிறார்கள், வழக்கமான பணிகள் என்ன என அனைத்தையுமே தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இது சிறந்த இடம் என்று சொல்லித்தான் என்னை அழைத்தார்கள். இங்கு வந்து பார்த்தபோது உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறது. அனைவரும் இந்த அருங்காட்சியகத்தை வந்து பார்வையிடுங்கள். உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
sivakarthikeyan ar murugadoss movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.