![Actor Saravanan's wife complains about him!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-8-N-uordmlCjIh0YAbL5dPqvFFKdbwuncKV-SsWweU/1683913528/sites/default/files/inline-images/12_134.jpg)
தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டை விட்டு தன்னை வெளியே போகச்சொல்லி நடிகர் சரவணன் மிரட்டுவதாக அவரது மனைவி தலைமைச் செயலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் சரவணனின் மனைவியான சூர்யா ஸ்ரீ, முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் தன் சம்பாத்தியத்தில் இருந்த சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பின் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னை காதலித்து கல்யாணம் செய்தார். பருத்தி வீரனுக்கு முன்பு அவரிடம் ஒன்றுமே இல்லை. பிரச்சனையில் கைகளில் பணமே இல்லாமல் இருந்தார். நான் சம்பாதித்து நான் தான் அவரை பார்த்துக்கொண்டேன். இதை அவரே பல பேட்டிகளிலும் பிக்பாஸிலும் சொல்லியுள்ளார். என்ன பிரச்சனை வந்தாலும் சரவணனும் அவர் தொடர்பில் இருந்த அந்த பெண்மணியும் தான் காரணம். இப்போது என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என்றார்.