Skip to main content

'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' படத்தின் புதிய புகைப்படங்கள்

சார்ந்த செய்திகள்

Next Story

"சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி மக்கள் கருத்து" (வீடியோ)

Next Story

திருமணத்திற்கு பிறகு வெற்றிகரமாக யூ டர்ன் அடிக்கும் சமந்தா 

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
samantha

 

 

 

திருமணத்துக்கு பிறகு பெரும்பாலான நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலையில் நடிகை சமந்தா மட்டும் விதிவிலக்காக இன்னமும் முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்தே இதற்கு காரணம். இதையடுத்து சமந்தா நடிப்பில் மேலும் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் மற்றும் யூ-டர்ன் படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இதில் யூ-டர்ன் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகிறது. இதை தொடர்ந்து ன் நடிகை சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிற நிலையில் இவர் அடுத்தாக மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா இப்படத்தை இயக்குவதாகவும், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.