Skip to main content

களத்தில் கெத்துக்காட்டும் நான்கு கம்பேக் வீரர்கள்!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை ஒருமுறை அணியில் சேர்ந்துவிட்டால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. புதிதாக வரும் வீரர்கள் கொஞ்சம் அதிரடி காட்டினாலே பெஞ்சில் உட்கார வைக்கப்படும் நிலையும் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்ததோடு, அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதிலும் இடத்தில் இடம்பிடித்து கெத்துக்காட்டும் நான்கு வீரர்களை இந்த பதிவில் காண்போம். 
 

ரவீந்திர ஜடேஜா
 

jaddu

 

சர் ஜடேஜா என செல்லமாக அழைக்கப்படும் இவர், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றிருக்கிறார். 2017, ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர், அதன்பிறகு அணியில் சேர்க்கப்படவே இல்லை. ஆசியக் கோப்பைத் தொடரில் ஹர்தீக் பாண்டியா, எஸ்.என்.தாகூர் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேற, அணியில் மீண்டும் இணைந்தார் ஜட்டு. கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே அசத்திய இவர், நான்கு விக்கெட் வீழ்த்தி 29 ரன்கள் மட்டுமே கொடுத்ததோடு, ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ், சகால் ஆகிய இரு முக்கியமான ஸ்பின்னர்கள் விக்கெட்டே எடுக்காதது குறிப்பிடத்தக்கது.

 

Steyn


தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இவர். காயம் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விளையாடாத நிலையில், ஜிம்பாப்வே தொடரின் மூலம் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கிறார். கம்பேக் கொடுத்த முதல் போட்டியில் 60 ரன்கள் விளாசிய ஸ்டெயின், 2 விக்கெட் வீழ்த்தினார். 35 வயதான ஸ்டெயினுக்கு இதுவே தன் வாழ்நாளில் முதல் அரைசதமாகும்.
 

லிசித் மலிங்கா
 

malinga


இலங்கை கிரிக்கெட் அணியில் அன் ஆர்த்தடாக்ஸ் வகையிலான வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கி, கலக்கியவர் லசித் மலிங்கா. சரியாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக அணியில் இடம்பெறாத இவர், கனடாவில் நடந்த குளோபல் டி20 தொடரில் அதிரடியாக விளையாடினார். இதன்மூலம், அணியில் சேர்க்கப்பட்டு வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். வெறும் நான்கு போட்டிகளில் இதுவரை 10 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அதில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் எடுத்த ஐந்து விக்கெட்டுகளும் அடக்கம். 

 

Hafeez

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது ஹஃபீஸ், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய அந்தத் தொடரில் சதமடித்து விளாசிய அவர், அதை மிக அழகாக கொண்டாடவும் செய்தார்.  
 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.