Skip to main content

புது வருடம் நலம் புரிய முருகனடி தொழுவோம்!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

காலம் ஓடுவதே தெரியவில்லை. இப்போதுதான் ஆண்டு பிறந்ததுபோல இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடுகிறது. இதைப்போலவே சென்ற தமிழ்ப் புத்தாண்டு பிறந்துமுடிந்து, அடுத்த புத்தாண்டு வந்துவிட்டது. தமிழ் ஆண்டுகள் வரிசையில் 32-ஆவது இடத்திலுள்ள "விளம்பி' ஆண்டு இவ்வருடம் சித்திரை 1-ஆம் தேதி பிறக்கிறது. பொதுவாக தமிழ்ப் புத்தாண்டு அன்று மக்கள் அதிகாலையில் நீராடி, நெற்றித் திலகமிட்டு, புத்தாடை அணிந்து, அவரவர் வீட்டிலுள்ள தெய்வத்தை வணங்கி, பின்பு சுவை மிகுந்த உணவுகளை உண்டு, மாலையில் ஏதாவது ஒரு கோவிலில் அல்லது பொது இடத்தில் புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுவதைக் கேட்டு அவ்வாண்டு நிலவரத்தைத் தெரிந்துகொள்வார்கள். இது காலங்காலமாகவே நடந்துவருகிறது.

 

temple



ஞானம், வைராக்கியம், வலிமை, புகழ், செல்வம், தெய்வசக்தி என்ற ஆறுமுகங்களையும் ஒருங்கே கொண்டவன் முருகப்பெருமான். அவன் ஆறுமுகன். அவன் அருள் இருந்தால் நமக்கு நடப்பதெல்லாம் நன்மையே. முருகன் தேவர்குலத்திற்குத் தேவன் என்றால், நம் தமிழர் குலத்துக்குத் தலைவன். தமிழை வளர்த்தவன். தமிழ்க் கடவுள். தமிழ்நாட்டில் பிறப்பதற்கும், தமிழ்மொழி கற்பதற்கும், பேசி மகிழ்வதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். கோடி புண்ணியம் செய்தவனே தமிழனாகப் பிறக்கிறான். காரணம், எந்த மொழிக்கும் கடவுள் என்ற ஒன்றில்லை. ஆனால் தமிழ்மொழிக்கு மட்டும் "முருகன்' என்னும் கடவுள் மும்மூர்த்திகளாலும் போற்றப்படுகிறான். வேதத்திற்கு அர்த்தம் சொன்னவன் முருகன்.

 

temple



பாண்டிய நாட்டுப் புலவரான நக்கீரரை "திருமுருகாற்றுப்படை' என்ற நூலைப்பாட வைத்தவன் தமிழ்முருகன். அருணகிரியாரின் நாவில் வேலால் எழுதி "திருப்புகழ்' என்னும் அற்புதமான சந்தங்கள் நிறைந்த பாடலை எழுத வைத்தவன் ஆறுமுகன். இதேபோல குமரகுருபரர் இயற்றிய "கந்தர்கலிவெண்பா', "பிள்ளைத் தமிழ்', கச்சியப்ப சிவாச்சாரியாரின் "கந்தபுராணம்', பாம்பன் ஸ்வாமிகளின் "சண்முக கவசம்', தேவராய சுவாமிகள் இயற்றிய "கந்த சஷ்டிக் கவசம்', ஔவையாரின் முருகன் மீதான பாடல்கள் என்று எண்ணற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவைத்தவன் முருகன். இவையெல்லாம் முருகப்பெருமானைத் தமிழால் போற்றி வணங்கக்கூடிய அருமையான, அற்புதமான பிரார்த்தனை நூல்களாகும்.

 

temple



எனவே தமிழ் வருடப்பிறப்பன்று முருகனை வழிபடவேண்டும். அந்த நாளில் குடும்பத்தலைவி அதிகாலையிலேயே துயிலெழுந்து நீராடி, பூச்சூடி பொட்டிட்டு புத்தாடை உடுத்தி, வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகன் படத்தின்முன்பு குத்துவிளக்கேற்றி, படத்திற்குப் பூமாலை சூட்டி, சிவந்த மலர்களால் அர்ச்சித்து, பஞ்சாமிர்தம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி முருகனை வணங்கி பூஜையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அப்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நீராடி தூய உடை உடுத்திப் பூஜையில் கலந்துகொண்டு முருகனை வணங்கவேண்டும். இந்த முருக வணக்கம் சித்திரை வருடப்பிறப்போடு இல்லாமல், வருடம் முழுவதும் வரும் திருமுருகனின் சிறப்பு நாட்களில் கொண்டாட வேண்டும்.

சித்திரை வருடப்பிறப்பன்று முருகனை வழிபடுவது மட்டுமின்றி, நம் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்களையும் வழிபடவேண்டும். திரு. உ.வே. சாமிநாத அய்யர்; மகாகவி சுப்ரமண்ய பாரதியார், மு. வரதராசனார் போன்ற தமிழறிஞர்களையும், இராமாயண காவியம் பாடிய கம்பர், தெய்வ நூலான திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர், சிவபக்தர்களான தேவாரம் பாடிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருமால் அடியார்களான ஆழ்வார்கள், தமிழ்த் தொண்டாற்றிய ஔவையார், முருக பக்தர்களான நக்கீரர், குமரகுருபர ஸ்வாமிகள், தேவராய சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் போன்ற மகான்களையும் நினைவுகூர்ந்து வழிபடவேண்டும். அவர்கள் இயற்றிய பாடல்களைப் பாடி முருகனின் அருள்பெறவேண்டும். அன்று மாலை அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச்சென்று, வள்ளி- தெய்வானையுடனான முருகனை வழிபட்டு வரவேண்டும்.

அன்று மாலையில் ஏதாவது ஒரு கோவில் அல்லது பொது இடத்தில், ஊர்ப்பிரமுகர் ஒருவராலோ அல்லது கோவில் அர்ச்சக ராலோ படிக்கப்படும் பஞ்சாங்கத்தைக் கேட்கவேண்டும். தற்போது பிறக்கவுள்ளது "விளம்பி' வருடமென்பதால், இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்பதை பஞ்சாங்கம் படிப்பவர் எடுத்துரைக்க, அதை ஊர்மக்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். இதை "பஞ்சாங்கப்படனம்' என்று கூறுவார்கள். "விளம்பி' வருடப் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை, மாசி மாதங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு. வைகாசி, ஆடி, கார்த்திகையில் மிதமான மழை இருக்கும். இதர மாதங்களில் மழை பெய்தாலும் பெய்யலாம்; பெய்யாமலும் போகலாம். விவசாயம் முன்பைவிட கொஞ்சம் மேலோங்கும். நீர்நிலைகள் வறட்சியைச் சந்திக்கும். இருந்தாலும் மக்கள் நலமாகவே இருப்பார்கள். இருநாடுகளுக்கிடையே நட்புறவுகள் ஓங்கும்.

இவ்வருட ராஜாவானவர் சூரியன் என்பதால், நாடு பிரகாசமாக நலிவின்றி இருக்கும். மந்திரி சனீஸ்வரன் என்பதால் கேடுகள், கொள்ளைகள், திருட்டுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சேனாதிபதி சுக்கிரன் என்பதால் மணவாழ்க்கைப் பிரச்சினைகள், விவாகரத்து போன்றவை அவ்வப்போது ஏற்பட்டு சில நன்மையிலும், சில கெடுதலிலும் முடியும். இவ்வருட தேவதை உமா மகேஸ்வரி என்பதால் மக்களுக்கு நன்மை- தீமை இரண்டும் மாறிமாறி வரும். கலி பிறந்து 5,118 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதால், கலிமகாத்மியத்தின்படி கல்வி, ஞானம் போன்றவை குறையும். தெய்வத்தின் மீதான பக்தி அதிக மிருப்பதுபோல தோன்றினாலும், நிந்தனையும் அதிகமாக இருக்கும். சாதுக்கள் அலட் சியப்படுத்தப்படுவார்கள். காமம், குரோதம், பொறாமை போன்றவை அதிகரிக்கும்.

நாட்டிற்குப் பொதுவாக நற்பலன்களே காணப்படும். தெய்வசக்தியால் தீமைகள் அழிக்கப்படும். இறைவன் பெயரை உச்சரித்து நற்பேறு பெறலாம். "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே- ஹரேகிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்ற மகாமந்திரத்தை ஜெபித்து நன்மை பல பெறலாம். அறுபது படிக்கட்டுகளைக் கொண்ட சுவாமிமலைத் தலம் அறுபது தமிழ் வருடங்களைக் குறிக்கிறது. பன்னிரண்டு படிக்கட்டுகளைக்கொண்ட திருக்காவலூர் முருகன் தலம் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கிறது. 365 படிக்கட்டுக்களைக்கொண்ட திருத்தணிகைத்தலம் ஒரு வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கிறது. எனவே தமிழ்வருடம் என்பது முழுக்க முழுக்க முருகனுக்கே உரியது என்பதால், வருடப்பிறப்பன்று முருகனை வழிபட்டு முழு அருள் பெறுவோம்.
 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.