Skip to main content

டெஸ்லா (Tesla) நிறுவனம் மீளுமா? நிலவுக்குப் போக முடியுமா?

Published on 15/10/2018 | Edited on 15/10/2018

 

tt

 

ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், 'அலிபாபா' ஜாக் மா வரிசையில் இலான் மஸ்க்-கும், தொழில்துறையில் புதிய சிந்தனைகளை செலுத்தியவர். முக்கியமாக ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் எனும் செயற்கை நுண் அறிவைக் கொண்டு தொழில்துறையில் மாற்றங்களை கொண்டுவந்தவர். இவரது நிறுவனமான டெஸ்லா (Tesla) மின்னணு கார் தயாரிப்பு நிறுவனம் உலக அளவில் பிரபலமானது. இலான் மஸ்க்கின் இன்னொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ஆயத்தமாகி வருகிறது. இப்படி அறிவியல் முன்னேற்றத்தை தொழிலாக நடத்தி வரும் அந்நிறுவனம் தற்போது நிதிநிலையில் பெரும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை அடுத்த ஆறு மாதத்திற்குள் உரியோருக்கு திருப்பித்தர வேண்டும். அதேசமயம் மற்றொரு தகவலின்படி தற்போது இருக்கும் நிதி நெருக்கடியில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தவே போதுமான வைப்பு நிதி இல்லை என்று தெரிகிறது. இந்த சவாலில் இருந்து டெஸ்லா நிறுவனம் எப்படி மீண்டுவரப்போகிறது என்று உலக அளவில் உள்ள தொழில் முனைவோர்களும் முதலீட்டாளர்களும் தீவீரமாக கவனித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

எலான் மஸ்க் அறிமுகம் செய்த ரோபோவில் இந்தியன் டச்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Indian Touch in Elon Musk Launched Robot

 

டெஸ்லா விண்வெளி நிறுவனத்தின் உரிமையாளரும், அண்மையில் ட்விட்டர் வலைத்தளத்தை விலை கொடுத்து வாங்கி அதை நினைத்தபடியெல்லாம் மாற்றிக்கொண்டிருப்பவருமான எலான் மஸ்க் தற்போது மனித வடிவம் கொண்ட ரோபோக்களை வெளியிட்டுள்ளார்.

 

டெஸ்லா நிறுவனம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ தளத்தில் 'டெஸ்லா ஆப்டிமஸ்' என்ற மனித வடிவிலான ரோபோக்களை பற்றிய செயல்பாடுகளை வெளியிட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு அடி அங்குலம் உயரம் கொண்ட மனித வடிவிலான இந்த ரோபோக்கள் 56 கிலோ எடை கொண்டது. இவை கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்து முடிக்கிறது.

 

பல்வேறு உலக நாடுகளின் சிறு சிறு அம்சங்களும் இந்த ரோபோக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் டச் ஆக இந்த ரோபோவில் சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 'நமஸ்தே' என்றால் 'வணக்கம்' வைக்கவும், நடராஜா ஆசனா, விருட்சாசனா ஆகிய இரண்டு ஆசனங்களையும் செய்து காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டு டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரோபோக்களின் செயல்பாடுகளை தற்பொழுது டெஸ்லா அறிமுகப்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக மனிதர்கள் ஒரே விதமான போர் அடிக்கும் வேலையைச் செய்வதைத் தவிர்க்கவே இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

நாட்டு நாட்டு பாடலுக்கு மரியாதை செலுத்திய டெஸ்லா

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Tesla pays tribute to naattu naattu song

 

முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மொழிப் படங்களான 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு பாடலும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படமும் விருது வாங்கியது. இதனால் இரண்டு படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தாங்கள் தயாரித்த கார்களின் மின் விளக்குகளை ஒளிர விட்டு 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிபரப்பு செய்து மரியாதை செலுத்தியுள்ளது. தற்பொழுது அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்தியா மற்றும் பூட்டான் ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மென் மற்றும் அவரது தூதரக குழுவினர் இப்பாடலை ஒலிக்கச் செய்து நடனமாடிய காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.