Skip to main content

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளருக்கு கத்திக்குத்து!!...(வீடியோ)

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
attack

 

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வேட்பாளரை கத்தியால் குத்திய சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.

 

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்தமாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சரம் சூடுபிடித்துள்ளது. இந்த அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ அந்நாட்டு சோசியல் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ள  ஜெர் போல் சோனரோ  மினாஸ் ஜெரேய்ஸ்  என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்திக்கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் மர்ம நபர் அவரை கத்தியால் குத்தி தாக்கப்படும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

 

இந்த கத்திகுத்தில் காயமடைந்த ஜெர் போல் சோனரோ சம்பவ இடத்திலேயே ரத்த காயத்துடன் மயங்கிவிழுந்து சரிந்தார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் 2 மணிநேரம் அறுவை சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.