Skip to main content

சிரியா படுகொலைகளை ஆவணப்படுத்தும் 15 வயது நிருபர்!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே நடந்துவரும் சண்டையால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களால் கிழக்கு கோட்டா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 58 குழந்தைகளும் அடக்கம்.

 

Syra

 

இந்தக் கொலைகளை சிரியா நாட்டு அரசு, ரஷ்யாவின் ஆதரவோடு செய்துகொண்டு இருப்பதாகவும், தினமும் அரசின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து மக்களைக் கொல்வதாகவும் கிழக்கு கோட்டா பகுதியைச் சேர்ந்த முகமது நஜெம் எனும் 15 வயது சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களின் ஆதாரங்களை ஆவணப்படுத்தி, அவற்றை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு வருகிறார்.

 

உலக மக்களுக்கு சிரியாவில் என்ன நடக்கிறது என்பது தெரியவேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிடும் நஜெம், ‘எங்கள் ரத்தம் உங்களிடம் பிச்சை கேட்கிறது. ஆனால், உங்கள் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இங்கு பசி, படுகாயங்கள் உள்ளிட்டவை சாதாரணமாகி விட்டன. கோட்டா மக்களைக் காப்பாற்றுங்கள்’ என ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

தன் நண்பர்கள் பலர் தாக்குதல்களில் செத்துவிட்டதாக நஜெம் ஒரு வீடியோவில் கூறுகிறார். போர் விமானங்கள் தாக்கும்போது அதை செல்பி வீடியோவாக எடுத்து, சிரிய அதிபர் பசர் அல்-அசாத், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் ஈரானின் மூத்த தலைவர் காமினெனி உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிடுகிறார்.

 

நான் என் படிப்பைத் தொடர்ந்து வருங்காலத்தில் நிருபராக வேண்டும் எனக் கூறும் நஜெம், இந்த இனப்படுகொலையில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என மழலை முகம் மாறாமல் கோருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

"நாம் ஒன்றிணைவோம்" - பாதிக்கப்பட்டவர்களுக்கு சன்னி லியோன் உதவி

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Sunny Leone help to Turkey earthquake victims

 

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதில் தற்போது வரை 46,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.   

 

அந்த வகையில், நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "எங்கள் நிறுவனம் ஸ்டார் ஸ்ட்ரக் மூலம் நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு எங்கள் வருவாயில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்கவுள்ளோம். 

 

நாம் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக இழந்ததை நம்பிக்கையோடு மீட்டெடுக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு கை கொடுங்கள். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க எங்களுடன் சேர்ந்து உதவுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் தொடர்ந்து அனாதை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அதையடுத்து தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.   

 

 

Next Story

துருக்கியில் தொடரும் துயரங்கள்; 36 ஆயிரத்தை நெருங்கிய உயிர்ப்பலி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

turkey earthquake casualty toll approaching 36 thousand ongoing

 

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 

துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

மீட்புப் பணிகள் அனைத்துப் பகுதிகளிலும் முடுக்கி விடப்பட்ட நிலையில் சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் துருக்கிக்கும் சிரியாவிற்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து மக்களை உயிருடனும் சடலமாகவும் மீட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது இரு நாடுகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.