Skip to main content

மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழப்பு

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட, நெல்லித்துறை பகுதியில் இன்று அதிகாலை அளவில் 30 வயது மதிக்கதக்க ஆண் யானை விவசாய நிலங்களில் உள்ள பாக்கு மரத்தினை சாய்க்க முயற்சிக்கும்போது அருகில் இருந்த மின்சாரவயரில் பட்டு மின்சாரம் தாக்கியதில் யானை அதே இடத்தில் இறந்துவிட்டது. 

 

elephant

 

elephant

 

காற்று மற்றும் மழை காரணமாக உடனடியாக மீட்பு பணிகள் செய்யமுடியாத சூழலில் காலை 10 மணியளவில் வனமருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தனர். சம்பவம் நடந்த இடம் கல்லாறு யானைகள் வழித்தடமாகும் இந்த யானை வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதால்தான் யானைகள் திசைமாறி வந்து இது போன்று இறக்கின்றன என வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

                                                                                                                                              சிவா 

 

 

 

சார்ந்த செய்திகள்