Skip to main content

இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வேண்டும் -சாயல்குடியில் அனைத்து சமுதாய தலைவர்கள் தீர்மானம்..!!!!

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

குடிநீர் எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை கண்டித்து சாயல்குடியில் கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அனைத்து சமுதாய தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக தீர்மானம் இயற்றியுள்ளனர்.

 

water

 

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட தாலுகாவை உள்ளடக்கிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜாபுரம் கிராம கிணத்திலிருந்து டிராக்டர்கள் மூலம் குடிநீர் எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மற்ற கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக தடை வாங்கியுள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக டிராக்டர் மூலம் விற்பனை செய்து வந்த குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடலாடி தாலுகாவில் பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் உவர்ப்பு நீர் மட்டுமே கிடைக்கிறது. இப்பகுதியில் கன்னிராஜபுரம் கிராமத்தை தவிர வேறெங்கும் சுவையான குடிநீர் கிடைப்பதில்லை.

 

 

இந்நிலையில் தண்ணீரின்றி தவிக்கும் கிராமங்களின் முக்கிய நிர்வாகிகள் அனைத்து சமூதாய தலைவர்கள், மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை சாயல்குடி அரண்மனையில்  நடைபெற்றது. இதுகுறித்து சாயல்குடி ஜமீன்தார் ஏ, சிவஞானபாண்டியன் கூறுகையில், "இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுமூக தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்ப்படாவிடில் வருகின்ற 15-5-2019 அன்று சாயல்குடியில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்." இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.