Skip to main content

மனைவி அழுகிய நிலையில் வாய்காலில் கிடப்பது தெரியாமல் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய போலிஸ்காரர் ! 

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
drain



திருச்சி உய்யகொண்டான் திருமலை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் வடக்கு கரைப்பகுதியில் கடந்த 1ம் தேதி இரவு அழுகிய நிலையில் பெண் செடி, கொடிகளுக்கு இடையே கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதியினர் உறையூர் போலிசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியாமல் போலிசார் குழம்பி போய் இருந்தனர். அந்த பகுதியில் காணமல் போனவர் பட்டியலை வைத்து போலிசார் விசாரணையை துவங்கினர். இந்த நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரின் முழுவதும் உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அவருடைய கணவர் ராஜசேகரன் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. ராஜசேகர் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் புதுக்கோட்டையில் எஸ்.ஐ.யாக வேலை செய்து வருகிறார். 


ஜெகதீஸ்வரி தான் வாய்காலில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்தில் சுமார் 15 பவுன் நகை அப்படியே இருந்தால் இது நகைக்காக நடைபெற்ற கொலை இல்லை என்பதை உறுதி செய்தனர் விசாரணை அதிகாரிகள். கோவிலுக்கு செல்லும் போது வாய்காலில் கால் வழுக்கி கீழே விழுந்தி மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்கிற ரீதியில் போலிஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. 


மனநிலை பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரி கோவிலுக்கு செல்வதாக சொல்லி சென்றவர் காணமால் போனதால் அவருடைய கணவர் ராஜசேகர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காமல் ஜெகதீஸ்வரியை பார்த்தால் தனக்கு தெரிவிக்கும் படி அவருடைய புகைப்படம் ஒட்டிய போஸ்டர்கள் ஒட்டினார். மனைவி வாய்காலில் அழுகி கிடப்பது தெரியாமல் போஸ்டர் ஒட்டிய போலிஸ்காரர் தன் மனைவியின் உடலை பார்த்ததும் கதறி அழுதார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்