Skip to main content

குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை? - போலீஸ் விசாரணை

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Teen passed away due to family problems? - Police investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது சோழபாண்டியபுரம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜி(32) - கனிமொழி (27) தம்பதியர். இவர் அந்தக் கிராமத்தின் வருவாய்த்துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்குத் திருமணமாகி ஆறு வயதில் கவிஸ்ரீ மற்றும் ஆறு மாதக் குழந்தை தஸ்விகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது குழந்தைகள் இருவருக்கும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தனது கணவரிடம் மனைவி கனிமொழி கோபமாகக் கேட்டுள்ளார்.

 

குழந்தைகளின் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது. எனவே பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். நான் பலமுறை வலியுறுத்தி கூறியும் அது குறித்து அலட்சியமாக இருப்பது ஏன் என்று கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த கனிமொழி நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் வீட்டில் இருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார். கனிமொழியை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். கனிமொழியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது கணவர் ராஜி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

 

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கனிமொழியைத் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அதே ஊரில் உள்ள குளத்தில் கனிமொழி பிணமாக மிதப்பதாக அப்பகுதிக்கு ஆடு மாடு மேய்க்கச் சென்ற ஊர்மக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கனிமொழி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கனிமொழி குளத்தில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கனிமொழியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.