Published on 02/09/2020 | Edited on 02/09/2020
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவானது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.