Skip to main content

நள்ளிரவில் இரு பிரிவினரிடையே திடீர் மோதல்... 13 பேர் அதிரடி கைது!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

Sudden confrontation between the two factions at midnight; 13 arrested in action

 

சேலத்தில் திங்கள்கிழமை (02.08.2021) நள்ளிரவில் திடீரென்று குடிபோதையில் இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு தரப்பையும் சேர்ந்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலம் கந்தப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்கிற பரோட்டா குமார். அதே பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார். திங்கள்கிழமை அப்பகுதியில், தங்கள் கோஷ்டியினருடன் மது குடித்துக்கொண்டிருந்தனர். 

 

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மது போதை உச்சத்தை அடைந்த நிலையில், இரண்டு கோஷ்டியினருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறி கைகலப்பாக மாறியது. 

 

இந்த மோதலில் அசோக்குமார் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த அசோக்குமார் தரப்பைச் சேர்ந்த 20 பேர், திரவுபதி அம்மன் கோயில் அருகே திரண்டனர். 

 

அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் வீட்டின் கண்ணாடியைக் கல்வீசி நொறுக்கினர். இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள் மது பாட்டில்களில் திரி கொளுத்தி, வெடிகுண்டாக வீசியெறிந்தனர்.  

 

இந்தக் களேபரங்கள் குறித்து சேலம் மாநகரக் காவல்துறைக்குத் தாமதமாகவே தகவல் கிடைத்தது. இதையடுத்து சூரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் கலவரக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. 

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என சுதாரித்த காவல்துறையினர், பரோட்டா குமார், குமார் உள்பட 8 பேரையும், அசோக்குமார் தரப்பைச் சேர்ந்த சித்தக்குட்டி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை துணை ஆணையர்கள் மோகன்ராஜ், வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையர் கும்மராஜா, உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.