Skip to main content

சகஜானந்தா 132வது பிறந்தநாள் விழா.. மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை! 

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Sakajananda 132nd Birthday Celebration .. District Collector, MLAs pay homage

 

சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் பள்ளிகளை நிறுவிய சுவாமி சகஜானந்தாவின் 132-வது பிறந்த நாளையொட்டி நந்தனார் ஆண்கள் பள்ளியின் வாயிலில் அவருக்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தில் வியாழக்கிழமை கடலூர் ஆட்சியர் (பொறுப்பு) ரஞ்சித்சிங் கலந்துகொண்டு சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 

இவருடன் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் நந்தனார் பள்ளிகளின் ஆசிரியர்கள், சிதம்பரம் முன்னாள் முனிசிபல் ஊராட்சி தலைவர் பத்மசுந்தரி உமாநாத், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நந்தனார் கல்வி கழக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராதகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள். சகஜானந்தா பணிநிறைவு பெற்றோர் சமூக பேரவையின் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சி.தண்டேஸ், வரநல்லூர் ஊராட்சி தலைவர் மாரியப்பன், சுவாமி சகஜானந்தா சமூக பேரவை மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். 

 

Sakajananda 132nd Birthday Celebration .. District Collector, MLAs pay homage

 

பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் மாணவர்களுக்குப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கபட்டது.  இதில் கலந்துகொண்ட அனைவரும் சுவாமி சகஜானந்தா புகழ் ஓங்குக எனக் கோசங்களை எழுப்பினார்கள் பின்னர் அனைவரும் பள்ளியின் கல்வி வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல் பள்ளியின் வாளத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

சுவாமி சகஜானந்தா 35 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் 7 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது கல்வி பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு மணி மண்டபம் கட்டியது என்பது குறிப்பிடதக்கது.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.