Skip to main content

ரூ.4 லட்சத்திற்கு ஸ்பெயின் நாட்டிற்கு குழந்தை விற்பனை.. குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த்

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
puthukottai


 

புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார்..

மத்திய அமைச்சரின் ஆலோசனைப்படி, நான் தலைவராக சென்ற குழு மூலம் கடந்த வாரம்.. மேற்குவங்க மாநிலம் ஆரார்யா பகுதியில் காய்கறி மூட்டைகளை போல கட்டி கடத்தப்பட்ட 5 குழந்தைகளை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய மருத்துவ குறிப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாங்கள் செய்த விசாரனையில் ஸ்பெயின் நாட்டிற்கு ராஜ்குமார் என்ற குழந்தை ரூ 4 லட்சத்திற்கு விற்க்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து அந்த குழந்தையை மீட்கும் முயற்சியாக ஸ்பெயின் தூதரகத்தில் ஆவணங்களுடன் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர்கள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2500 அனுமதி பெறாத குழந்தை பாதுகாப்பு  செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்படும். இனிமேல் குழந்தை கடத்தலி்ல் ஈடுபடுவோருக்கு மரணதண்டனையை விட கொடிய தண்டனை வழங்கபடும். பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியோடு மனநல கலந்தாய்வு நடத்தப்படும். இதற்காக குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு விரைவில் சிக்கிம் அல்லது மணிப்பூரில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.


குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள் அவர்களை தொழில் ரீதியாகவோ, படிப்பிலோ கொடுமைப்படுத்த நினைக்கும் பெற்றோர்கள் கூட அஞ்சும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை நேரடியாகவோ அல்லது உறுப்புகளுக்காகவோ, அயல்நாடகளுக்கு கடத்தவோ, விற்பனை செய்யவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவேருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கபப்டும்.


எங்கள் ஆணையத்தின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் பார்த்த லதா ரஜினிகாந்த் தயா பவுன்டேசனும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகளுக்கான குற்றம் 16.4 சதவீதமாக இருந்து தற்போது பாஜக ஆட்சியில் 4 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு டாக்டர் ஆனந்த் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.