Skip to main content

இந்து மீனவர் சடலத்தை சுமந்து இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்

Published on 28/08/2019 | Edited on 28/08/2019


    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். அந்த நேரத்தில் அவரை அடையாளம் தெரியவில்லை என்றாலும் நள்ளிரவில் அவரைப் பற்றிய தகவல் கிடைத்தது. 

அவர், நாகை மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள தோப்புத்துறை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(47) மீனவர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிழைப்பிற்காக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வந்து ஒரு குடிசைப் போட்டு தங்கி மீன்பிடித்து வருகிறார்.

s

இவருக்கு பரிமளாதேவி (30) என்ற மனைவியும் இவர்களுக்கு ஆர்த்தி, சித்திராதேவி, புஷ்பவள்ளி, சத்தியா ஆகிய 4 பெண் குழந்தைகளும் முருகன் (வயது 1) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

 

செல்வராஜ் சம்பளத்திற்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று வரும் வருமானத்தில் குடும்பம் நடந்தது. பரிமளாதேவி வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொண்டார். 

 

s


இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு  கோட்டைப்பட்டினம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் செல்வராஜ்(47) என்பவர் மரணம் அடைந்தார்.

விபத்தில் இறந்த செல்வராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் அறிந்து கதறி அழமட்டும் அவருக்கான சொந்தம் மனைவியும், குழந்தைகளுமே இருந்தனர். சொந்த ஊரிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உறவோ சொத்தோ இல்லை என்று பரிமளாதேவி கண்ணீர் வடித்தார். பிரேதப் பரிசோதனைக்கு ஆகும் செலவுக்கு கூட கையில் பணம் இல்லை என்று குழந்தைகளை கட்டி அணைத்துக் கொண்டு நின்றார். அந்த அளவிற்கு மிகவும் பின்தங்கிய  நிலையில் இருந்தனர்.


இந்த தகவல் அறிந்து வந்த கோட்டைப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் பொறுப்பில்  மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கான அனைத்து உதவிகளும் செய்ததுடன் செல்வராஜ் உடலை மணமேல்குடி பகுதியில் உள்ள பொது மயானத்தில் அவர்களின் வழக்கப்படி இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்.

 

அத்தோடு சென்றுவிடவில்லை அந்த இஸ்லாமிய இளைஞர்கள். வறுமையில் 5 குழந்தைகளுடன் வாடும் செல்வராஜின் மனைவிக்காக  அங்கு நின்றவர்கள் முதல் தங்கள் கையில் இருந்ததையும், வீடு வீடாகவும் சென்று சேகரித்த நிதி ரூ. 30 ஆயிரத்தை முதல்கட்டமாக கொடுத்த்துடன் மேலும் அந்த குடும்பத்திற்காக பல தரப்பிலும் நிதி திரட்டி வருகின்றனர். அதில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற பாகுபாடின்றி அவர்கள் கையில் இருப்பதை வழங்கி வருகின்றனர்.

 

k

மற்றொரு பக்கம் விசைபடகு சங்கத்தினர் வர்த்தக சங்கத்தினர்களும் குடும்பத்தலைவரை இழந்து வறுமையில் வாடும் செல்வராஜ் குடும்பத்திற்காக நிதி திரட்டி வருகிறனர்.. இந்த சம்பவங்கள் அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து சேவையில் ஈடுபட்டிருந்த அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள்...

எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். இறப்பு என்பது அனைவருக்கும் சமமனாது. இதில் ஜாதி, மத பார்க்க தேவையில்லை . இறந்த செல்வராஜ் குடும்பத்தினர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர் மற்றும் சொல்லி கொள்ளும் அளவுக்கு சொந்தங்களும் இல்லை அதனால் அவரை எங்களில் ஒருவராக நினைத்து அவர் பின்பற்றி வந்த இந்து மதம் சார்ந்த சடங்குகளுடன்  அடக்கம் செய்தோம். அவர் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று கூறினார்கள்.

 

k

மேலும், எங்கள் ஊரை போலவே மற்ற ஊர்களிலும்  அனைத்து மக்களும் ஜாதி, மத வேறுபாடு பார்க்காமல் ஒன்றுமையாக அண்ணன் தம்பிகளாக சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் அதற்கு இந்த நிகழ்வு அடிதளமாய் அமையும் என்று நினைக்கின்றோம் என்றனர்.


கிராமங்களில் இன்னும் மனிதம் வாழ்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. எங்கேயும் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் ஒரு சிலரின் லாபத்திற்காக தான் பிரித்து வைத்து பார்க்கிறார்கள். 
           

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.