Skip to main content

7 லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Nearly 7 lakh healed - Corona situation in Tamil Nadu today!

 

தமிழகத்தில் இன்று மூன்றாயிரத்திற்கும் குறைவாக 2,481 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 19,504 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 671 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 15 -ஆவது நாளாக 1,000-க்கும் குறைவாகக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,01,196 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 68,984 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இன்று மேலும் 3,940 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,98,820 ஆக அதிகரித்து 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 31 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,183 ஆக அதிகரித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்