Skip to main content

"தமிழகத்தில் பத்திரிகையாளர்களால் பாதுகாப்பாக உணர்கிறோம்" -  நளினி பேட்டி 

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

nalini said We feel safe with journalists tamilnadu

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் தற்போது இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திப்பதற்காக நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தனர். சுமார் 6 மணி நேரம் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நான்கு பேருடன் விவாதித்து விட்டு வெளியே வந்த நளினி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர், “ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகள் யார் என்பது எனக்குத் தெரியாது. சிறப்பு முகாமும் சிறை போன்றதுதான் அதிலிருந்து 4 பேரும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும், அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்கு, அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என அரசுக்கு நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் எனது கணவரை நான் 6 மணி நேரம் சந்தித்துப் பேசவில்லை. அவரை சந்திப்பதற்கான நடைமுறைகளை முடிப்பதற்கு நீண்ட நேரம் சிறப்பு முகாம் வாசலில் காத்துக் கிடந்தேன். அவர்களைச் சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் முன் வைத்துள்ளேன். அதனை அவர் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுள்ளார்.

 

எங்களது குடும்பம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தைக் கொண்டது. இந்திரா காந்தி மறைவின் போதும், ராஜீவ்காந்தியின் மறைவின்போதும், அதற்காகக் கண்ணீர் வடித்து எங்களது குடும்பம் வருந்தியிருந்தது. ராஜீவ் கொலையானபோது எங்கள் குடும்பமே மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தோம். முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் இலங்கைக்குச் செல்ல விரும்புகிறார். எனது கணவர் முருகனுடன் நான் லண்டனுக்குச் சென்று மகளுடன் வாழ விரும்புகிறோம். விடுதலையான பின்னும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதால் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். அவர்களை மிகுந்த சிரமப்பட்டுத் தேற்றினோம். எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறோம்.

 

நாங்கள் நிரபராதிகள் தேவையில்லாமல், 32 ஆண்டுகள் சிறையிலிருந்தோம். ஆனால் ராஜீவ் கொலையாளிகள் யார் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அனைவரும் எங்களது குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் சிறையிலிருந்தபோது நிறைய கோயில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது என்று வேண்டி இருந்தோம். அவற்றையெல்லாம் நிறைவேற்ற விரும்புகிறோம்.

 

முருகனைத் தவிர்த்த மற்ற மூன்று பேரும் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தாலும், அங்கு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் அதற்கு இடம் கொடுக்குமா? என்று தெரியவில்லை. எனவே அவர்கள் விரும்புகின்ற நாட்டிற்கு அவர்களை அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.