Skip to main content

எம்.ஜி.ஆர். விழாவுக்கு முதல்வர் வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை!

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
எம்.ஜி.ஆர். விழாவுக்கு முதல்வர் வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை!



மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம், சேலம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை கரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

அரசு விழா என்று சொன்னாலும் அரசியல் பேசும் விழாவாக தான் இது நடந்து கொண்டுயிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களை அழைத்து சென்று கூட்டம் காட்டுகிறார்கள்.

கட்சிகாரர் ஒருவரிடம் நாம் ஏன் கட்சிகாரர்களையும் பொதுமக்களை அழைக்காமல் பள்ளி கல்லூரி மாணவர்களை அழைக்கிறார் என்று விசாரித்ததற்கு பொதுமக்களுக்கும், கட்சிகாரர்களுக்கும் அழைத்து வருவதற்கு தலைக்கு பணம் கொடுத்து தான் அழைத்து வரவேண்டும். அப்படியே பணம் செலவு செய்து ஆட்களை கொண்டு வந்தாலும் கூட்டத்திற்கு நடுவே கலைந்து விடுகிறார்கள். என்பதால் எந்த செலவும் இல்லாமல் பள்ளி கல்லூரி மாணவர்களை அழைத்து செல்கிறோம் என்றார்கள்.

இந்த நிலையில் அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் ”பாடம் நாராயணன்” சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது.

இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர். தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை கரூர் மாவட்டத்தில் எம்ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிக பிரமாண்டமாக ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களை அரசு நிகழ்ச்சிக்கு அழைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு இருக்கும் நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் எல்லாம் மாணவர்களுக்கு விடுமுறைக்கு அளித்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அவர்களிடம் நாம் இது குறித்து பேசிய போது.. நான் எந்த பள்ளியையும் விடுமுறை விட சொல்லி நாங்கள் சொல்லவில்லையே என்றோர். பின் ஏன் சார்.. அனைத்து தனியார் பள்ளிகளும் விடுமுறை விட்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர்களாகவே முன் வந்து விடுமுறை விட்டுடிருப்பார்கள் என்றார்.

நூற்றாண்டு விழா நடக்கும் அந்த பகுதி உள்ள கடைகள் எல்லாம் மதியத்திற்கு மேல் கடைகளை அடைக்க சொல்லிவிட்டார்களாம்.

- ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்