Skip to main content

“இவங்களுக்கு நல்ல புத்திய கொடுங்க தலைவா...” - எம்.ஜி.ஆரிடம் கதறி அழுத தொண்டர்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

mgr front admk member crying about ops and eps

 

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 51 ஆம் ஆண்டு விழாவை அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஒற்றைத் தலைமை பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா என மூன்று அணிகளாக பிரிந்து இருக்கின்றனர். இத்தகைய செயல்களால் அதிமுக தொண்டர்களிடம் மூத்த தலைவர்கள் வெறுப்பை சம்பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அதிமுக கட்சியின் 51ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில் அதிமுக 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

அப்போது எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த குடியாத்தம் முன்னாள் நகர செயலாளர் புலிகேசவன் என்பவர்  திடீரென எம்.ஜி.ஆரை வணங்கியபடி இந்தக் கட்சியை ஒன்றாக்கி ஓபிஎஸ், இபிஎஸ்க்கு நல்ல புத்தியைக் கொடுங்க தலைவா. இனிவரும் காலங்களில் தேர்தலில் உங்கள் எண்ணமும், அம்மாவின் எண்ணமும் நிறைவேற வேண்டும். இந்த இயக்கம் அழியாமல் இருக்க இருவருக்கும் நல்ல புத்தியைக் கொடுத்து கட்சியைக் காப்பாற்ற சொல்லுங்க தலைவா என்று கதறி அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்