Skip to main content

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தான் உருவாக்கிய எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய எம்.ஜி.ஆர். ரசிகர். 

Published on 17/01/2019 | Edited on 18/01/2019
ம்

    

கொத்தமங்கலம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். சிலை கட்டிய கூலி தொழிலாளி தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு கஜாவால் வீட்டையும் இழந்து வறுமையில் வாடினாலும் எம்.ஜி;ஆர் பிறந்த நாளை மறக்காமல் குழந்தைகளின் உதவியுடன் கைத்தாங்களாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை இனிப்பு வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள  கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். (வயது 48). கூலித் தொழிலாளியான இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். கீரமங்கலத்தில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் தொழிலாளியாக வேலை செய்தவர். பிறகு வாடகை சைக்கிள் கம்பெனிகள் நலிவுற்ற நிலையில் தொழிலை இழந்து பல்வேறு கூலி தொழில் செய்து வருகிறார். 
 எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்று கொண்டு கூலிவேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் ரூ. 20 ஆயிரம் செலவு செய்து 1994 ஆம் ஆண்டு கொத்தமங்கலம் கிராமத்தில் எம்.ஜி.ஆர்.க்கு சிலை அமைத்தார். அந்த சிலையை  தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அப்போதைய எம்ஜிஆர் அதிமுக நிறுவனருமான திருநாவுக்கரசர் 1995 ம் ஆண்டு திறந்து வைத்தார். 
அன்று முதல் எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அச்சிலையை புதுப்பித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்குவதை மாணிக்கவாசகம் வழக்கமாக கடைபிடித்து வருகிறார்.

 

ம்

  

 தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கூலி வேலை செய்ய முடியாத நிலையில் வறுமையில் உணவிற்கே வசதி குறைவான நிலையில் வாழ்ந்து வருகிறார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் எம்ஜிஆர் பிறந்த நாளான 17; தேதி தனது நண்பர்கள் உதவியுடன் எம்.ஜி.ஆர் சிலையை புதுப்பித்வர் தனது மகள்கள், குடும்பத்தினர் உதவியுடன் கைத்தாங்கலாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க வணங்கினார். தொடர்ந்து அங்கு நின்ற மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். வறுமையிலும் தனது தலைவனை மறக்க மனமின்றி பிறந்த நாளை கொண்டாடியது காண்போரை நெகிழ வைத்தது.

 

m


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்.. மாணிக்கவாசகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். 25 ஆண்டுகளுக்கு முன்பே கூலி வேலை செய்து தான் சம்பாதித்த சேமித்த பணத்தின் தன் குடும்பத்திற்கு கூட செலவு செய்யாமல் ரூ. 20 ஆயிரத்தை கொண்டு எம்.ஜி.ஆர். க்கு சிலை அமைத்ததார்.  அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்தநாளை விமரிசையாக அவர்  கொண்டாடி வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு அவரது குடும்பமும் வறுமையில் தவிக்கின்றது. ஆனால் அந்த சூழலில் கூட அவர் எம்ஜிஆரை மறக்காமல் இன்றும் அவரது பிறந்தநாளை தன்னால் இயன்றதை செய்து கொண்டாடி வருகிறார். 

 

மேலும் கஜா புயலில் சேதமடைந்த சிறிய வீட்டில்  மூன்று பெண் குழந்தைகளை  வைத்துக்கொண்டு அவர்களை படிக்க வைக்க முடியாமலும் அன்றாட உணவுக்கு கூட முறையான வழியின்றி தவிக்கும் அவரது குடும்பத்திற்கு அரசு ஏதேனும் உதவிகள் செய்தால் ஏழ்மையில் தவிக்கும் எம்ஜிஆரின் ரசிகரான அவருக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.