Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

merina kalaignar and anna tamilnadu chief minister mkstalin

 

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு இன்று (04/07/2021) இரவு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

merina kalaignar and anna tamilnadu chief minister mkstalin

முன்னதாக, இன்று (04/07/2021) காலை தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகக் கடமையாற்றும் வாய்ப்பை தி.மு.க. தலைவர் தந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கலைஞர் நினைவிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார்.

 

சார்ந்த செய்திகள்