Skip to main content

தேர்தல் பிரச்சனை... தந்தையின் கழுத்தை நெரித்தவரின் காதை கடித்து துப்பிய மகன்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

local body election pudukkottai incident

 

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (09.10.2021) நடந்தது. பல இடங்களில் இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் தனது ஆதரவாளருக்கு வாக்களிக்கவில்லை என்று கூறி தகராறு செய்து தாக்கியவரின் காதைக் கடித்து துப்பியுள்ளார் ஒரு இளைஞர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு ஊராட்சியில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. கீதா துரையரசன் (பூட்டுச்சாவி சின்னம்), ஜானகி செல்வராஜ் (ஆட்டோ சின்னம்). ஆகிய இருவரும் வேட்பாளராகப் போட்டியிட்டனர். சனிக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 2,985 வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

இந்த நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை மாங்காடு உசிலங்கொல்லை பகுதியைச் சேர்ந்த ரெங்கையன் மகன் குமரேசன் (வயது 40) என்பவர் விடங்கர் கோயில் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அதே ஊரில் உள்ள சுந்தரகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜயசுந்தரம் (வயது 57) என்பவரிடம் “நீ ஆட்டோவுக்கு ஓட்டு போடாமல் பூட்டுச் சாவிக்கு ஏன் ஓட்டு போட்டாய்” என தகராறு செய்து, “ஆட்டோவுக்கு ஓட்டு போட்டிருந்தால் மாரியம்மன் கோயிலில் வந்து சத்தியம் செய்” என்று கூறி தகராறு செய்துள்ளார். 

 

தகராறு செய்ததுடன் விஜயசுந்தரம் கழுத்தையும், உயிர்நாடியையும் நெரித்தபோது தடுக்க வந்த விஜயசுந்தரம் மனைவி ராஜலெட்சுமி (வயது 50), மகன் சதீஷ் (வயதை 26) ஆகியோரையும் தாக்கியுள்ளார். தந்தையின் உயிர்நாடி கழுத்தை நெரிப்பதைப் பார்த்த மகன் சதீஷ் விலக்கிவிட முயன்றும் பயனளிக்காததால் குமரேசனின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார். தகராறு குறித்து அங்கு வந்த குமரேசன் தம்பி இளங்கதிருக்கும் காதில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

காது துண்டான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு துண்டான காதை இணைத்து தையல் போட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். குமரேசன் தம்பி இளங்கதிரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

அதேபோல கழுத்து மற்றும் உயிர்நாடியில் நெரித்ததால் காயமடைந்த விஜயசுந்தரம் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி ஆகியோர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சதீஷ் லேசான காயத்துடன் உள்ளார்.

 

சம்பவம் குறித்து குமரேசன் கொடுத்துள்ள புகாரில், விடங்கர் கோயில் பக்கம் எனது பூந்தோட்டத்திற்கு சென்றபோது வழிமறித்த விஜயசுந்தரம் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் வீடு கட்ட மணல் அள்ளியதை எப்படி காவல்துறையிடம் சொல்லலாம் என்று கூறி அடித்து காதை அறுத்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

 

அதேபோல விஜயசுந்தரம் கொடுத்த புகாரில், அவரது ஆதரவாளருக்கு ஓட்டு போடவில்லை என்று கூறி தன்னிடம் தகராறு செய்து கொலை செய்ய முன்றதால் அதனைத் தடுக்க வந்தவர்களையும் தாக்கினார். என்னைக் கொன்றுவிடுவாரோ என்று என் மகன் சதீஷ் குமரேசன் காதை கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

 

போலீசார் விசாரணையில், குமரேசன் புகாரில் கூறியுள்ள பகுதியில் தோட்டம் இல்லை என்பதும் விஜயசுந்தரத்திடம் மணல் அள்ள மாட்டு வண்டியோ, வேறு வாகனங்களோ இல்லை என்பதும்  தெரியவந்துள்ளது. மேலும், விஜயசுந்தரத்திடம் தகராறு செய்யும் முன்பு இதேபோல ஓட்டு போட்டது குறித்து வேறு ஒருவருடன் தகராறு செய்ததும் தெரியவந்துள்ளது.

 

சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். தேர்தல் பிரச்சனையில் காதைக் கடித்துத் துப்பிய பிரச்சனை பரபரப்பாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.