Skip to main content

முதியவரை வெட்டிக் கொலை செய்த முகமூடி கொள்ளையர்கள்!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே முகமூடி அணிந்த கொள்ளைக்கும்பல் வெட்டியதில் முதியவர் உயிரிழப்பு. 
 

ராயக்கோட்டைக்கு அருகே எனவனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பணம், நகைக்கேட்டு, சாத்தப்பன் மற்றும் மருமகள் சிவரஞ்சனியிடம் மிரட்டல். அப்போது இருவரும் சத்தமிட்டதால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் முதியவரை வெட்டிவிட்டு தப்பி ஒட்டிவிட்டனர். 

kirishnagiri incident police investigation


இதில் முதியவர் சாத்தப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 


 

சார்ந்த செய்திகள்