Skip to main content

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற  ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா!

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 

தமிழகம்  ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை எட்டு நாட்களாக நடத்தினார்கள். அப்படியிருந்தும் இந்த எடப்பாடி அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர ஆர்வம் காட்டாமல் மெத்தன போக்கையே கடைபிடித்து வந்தது.  இதனால் டென்ஷன் அடைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. 

 

j


 இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ  ஜியோ அமைப்பு மூலம்  போராட்டத்தில் சிறை சென்ற 43 இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா  நடைபெற்றது
.


கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதல் 8 தினங்கள் ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது.  இதனையடுத்து போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்தது.  திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 43 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பைச் சேர்ந்த அந்த 43 ஆசிரியர் களுக்கும்  பாராட்டு விழா நடைபெற்றது.

j

 இந்த இந்த விழாவிற்கு ஜாக்டோ ஜியோ வின் நிதி காப்பாளர்மோசஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.   அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முபாரக் அலி வாழ்த்தி பேசினார்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் கணேசன், மாநிலத் தலைவர் மணிமேகலை,  மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணவேணி, உள் பட மாவட்ட அளவில் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'நிதி நிலைமை சீரடைந்ததும் பரிசீலிக்கப்படும்' - தங்கம் தென்னரசு கோரிக்கை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
'Will be considered when the financial situation stabilizes'-Thangam Tennarasu demand

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்; ‘ஜேக்டோ – ஜியோ’ அறிவிப்பு

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Jacto-Jio has announced that it will besiege the tn Secretariat on 28th

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் ஜேக்டோ – ஜியோ சார்பில் மாநில உயர்மட்டக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் வரவேற்றார். அன்பரசு தலைமை தாங்கினார், வி.எஸ். முத்து ராமசாமி முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ – ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 28 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளரும், மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருமான திருச்சி நீலகண்டன் உட்பட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் நன்றி கூறினார்.