Skip to main content

எனக்கு மெட்டி போட்டு என் கையாலேயே வீடியோவை எடுக்க வைச்சான்: நிலானி பேட்டி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
nilani nila



தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். 


 
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 
 

தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு போன் பண்ணிய காந்தி லலித்குமார், என்னை அவாயிட் பண்ற, நான் தற்கொலை செய்து கொள்ளப்போறேன் என்றார். அன்னைக்கு பூரா நான் போனை எடுக்கல. அன்று மாலை அவரோட நண்பரிடம் இருந்து போன் வந்தது. மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்று போன் வந்தது. அவரோட டூம்மெட் ராம் என்பவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கே.எம்.சி.யில் அட்மிட் பண்ணியிருக்கிறார். 
 

ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஓடினேன். என்னோட பெயர் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஓடினேன். அங்கேயும் அட்வைஸ் பண்ணிப் பார்த்தேன். திருந்தவில்லை. திரும்பவும் எனது போனுக்கு வந்து, ஓ.கே. நிலானி லாஸ்டா நமக்குள்ள ஒரே ஒரு விசயம் பேசி முடிவு பண்ணிக்கொள்ளலாம். ஒரே ஒரு நாள் நான் ஆசைப்படுகிற மாதிரி நீ இருந்துட்டன்னா உன்னைவிட்டு நான் போயிடுறேன்னு சொன்னான். என் தலையில் அடித்து சத்தியம் பண்ணினான். 
 

நீ ஆசைப்படுகிற மாதிரியின்னா எப்படி என்று கேட்டேன். கடைசியா மயிலாப்பூரில் பஸ்ஸில் நடந்த விசயம். நீங்களெல்லாம் வீடியோவில் மெட்டி போடுகிற விசயத்தை பார்த்திருப்பீங்க. என்னை பிளாக்மெயில் பண்ணி கடைசியா உன் காலில் மெட்டி போட்டுவிட்டு போயிடுறேன்னு சொல்லி அப்புறம் நான் மீட் பண்ண மாட்டேன் என்று சொன்னான். இந்த ஒரு விசயத்தை சம்மதிச்சிக்கோன்னு சொன்னாங்க. 
 

சரி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவ்வளவு சைக்கோவா இருக்கிறவன் என் குழந்தைகளை ஏதாவது பண்ணிடுவானோன்னு பயந்து, அதற்கு சம்மதிச்சேன். எனக்கு அன்னைக்கு மெட்டிய போட்டு என் கையாலேயே அந்த வீடியோவை எடுக்க வைச்சான். என் கூட அன்னைக்கு தூங்கியே ஆவேன்னு சொல்லி கட்டாயப்படுத்தி போட்டோவையும் எடுத்து அவன் வைச்சிக்கிட்டான். 
 

சரி இதோட விட்டுருவான்னு நினைச்சா... விடல... அதற்கு அப்புறமாதான் எனக்கு பிரச்சனை அதிகமாயிடுச்சி... இந்த எவிடன்சை வைச்சே உன்னை கல்யாணம் பண்ணியே ஆவேன்னு நாலு, ஐந்து நாளா பெட்ரோல் பாட்டிலோட சுத்திக்கிட்டிருந்தான். 
 

எனக்கு போன் பண்ணி வெளியே வா, என்னுக்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா, இல்லன்னா நான் பெட்ரோல் ஊத்திக்கிட்டு கொளுத்திப்பேன் என மிரட்ட ஆரம்பிச்சான். நான் ரொம்ப பயந்துபோய் இருந்தேன். 
 

ஒரு கட்டத்தில், உன் குழந்தைகளுக்காகத்தானே என்னை வேணாமுன்னு சொல்ற, உன் குழந்தைகளை நான் கொன்னுட்டா நீ என்ன பண்ணுவ. நீயும் செய்துபோயிடு.. குழந்தைகளும் செத்துபோயிடட்டும், நானும் செய்து போயிடுறேன்னு சொன்னான். மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு போவதற்கு முதல் நாளு இதே பிளாக் மெயில்தான். 
 

மயிலாப்பூரில் நான் ஷீட்டிங்கில் இருந்தேன். எனக்கு போன் பண்ணி 10 நிமிசம் கெடு. நீ வெளியே வல்லன்னா பெட்ரோல ஊத்திப்பேன். 9 நிமிசம், 8 நிமிசம் என கவுண்டவுடன் கொடுத்தான் எனக்கு. எனக்கு தாங்க முடியாம மன உளைச்சலில், குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி வெளியே ஒடி வந்து போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் புகுந்தேன். 
 

என்னை டார்ச்சர் பண்றான். என்னை காப்பாத்துங்கன்னு புகார் கொடுத்தேன். இந்த புகாரை நீங்க போய் பாருங்க. இதில் எங்கேயாவது அவன் மனைவி என்று சொல்லியிருக்கானான்னு. நண்பர்களாகத்தான் பழகினோம் என்று சொல்லியிருக்கான். எனக்கு அவுங்கள ரொம்ப பிடிக்கும். அதனாலதான் அப்படி கேட்கிறேன்னு எழுதி கொடுத்திருக்கான். இனிமே அவுங்கள டார்ச்சர் செய்ய மாட்டேன். பாலோப் பண்ண மாட்டேன்னு எழுதி கொடுத்திருக்காங்க. 
 

அதற்கு அப்புறம் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு மெசேஜ் பண்ணிக்கொண்டிருந்தான். நான் ரிப்ளே பண்ணவில்லை. ஒரு போன் காலை மட்டும் அட்டன் பண்ணினேன். அப்போது பேசிய அவன், இனி நான் நல்லவனாக வாழ்கிறேன். நான் பொம்பள பொறிக்கிதான். எனக்கு ஒருசந்தர்ப்பம் கொடு என்றான். நான் வேண்டவே வேண்டாம் என்றேன். அவ்வளவுதான் நடந்தது. இவ்வாறு கூறினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழைய சம்பவங்களை கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சனை... பேட்டியின் போது நடிகை கண்ணீர்...

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, போலீசார் பற்றி பேசி போலீஸ் உடையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் நிலானி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரணடு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். 


 

 

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி லலித்குமார் என்ற திரைப்படய உதவி இயக்குநருடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து இறந்தார். இதையடுத்து நிலானி தனது குழந்தைகளுடன் போரூர் அருகே குடியேறினார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். 

 

nilani serial actress


 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

பழைய சம்பவங்கள் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். இப்போது புதிய பிரச்சினையில் சிக்கி உள்ளேன். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியதால் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2 குழந்தைகளோடு நான் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு வந்தேன். என் வாழ்வில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்துள்ளேன்.
 

என் நிலையை அறிந்து, சமூகவலைதளமான ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமானார் மஞ்சுநாதன். உதவி செய்வதாக கூறினார். வேலூரை சேர்ந்த மஞ்சுநாதனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது கஷ்ட நிலையை பார்த்து அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார். வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்தார். அடிக்கடி செல்போனில் பேசுவார். என்னை நேரடியாகவும் வந்து சந்தித்தார்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் அதற்கு சம்மதித்தேன். எனினும் அவரது பெற்றோரின் சம்மதம் பெற்றுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் தெரிவித்து இருந்தேன். அவர் திருமணம் ஆகாதவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்று பின்னர் தெரியவந்தது.
 

இதனால் அவரோடு பழகுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனக்கு அவர் ஒரு செல்போன் வாங்கி தந்தார். திடீரென எனது வீட்டிற்கு வந்த அவர் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த செல்போனில் இருந்த எனது படங்களை தவறாக பயன்படுத்துவேன் என்று கூறி மிரட்டினார்.


 

 

எனது குளியல் அறையில் கேமரா பொருத்தி என்னை படம் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறினார். அதனை இணையதளத்தில் வெளியிடுவேன்,  எனது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த இந்த நேரத்தில்கூட என்னை செல்போனில் அழைத்து மிரட்டினார்.
 

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் உள்ள எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் புகார் கொடுக்க வந்தேன் என கண்ணீருடன் பேட்டி அளித்தார். 

 

Next Story

அபிராமியோட என்னை கம்பேர் பண்றாங்க... கதறி அழுத நடிகை நிலானி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
nilani nila



தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். 

 
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 
 

சம்பவம் நடந்த அன்று நான் கேகே நகரில் ஷீட்டிங் முடித்துவிட்டு நான் ஆட்டோவில் கிளம்பினேன். இவன் ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு வண்டியில வரான். நான் அங்கிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் என்னுடைய அசிஸ்டென்ட் போன் பண்ணி, மேடம் இங்க ஒருத்தர் தீக்குளிச்சிட்டார் என தெரிவித்தார்.
 

எனக்கு ஒரு டவுட் வந்தது. நேரா கிளம்பி கேகே நகர் போலீஸ் ஸ்டேசனில் போய் விசாரித்தேன். யார் தற்கொலை பண்ணியதுன்னு. காந்தி லலித்குமார் என்று சொன்னாங்க. எங்க கொண்டு போயிருங்காங்கன்னு கேட்டு அங்கேயும் போய் பார்த்தேன். அவன் எதிரியாகவே இருக்கட்டும். எனக்காக போயிருக்குன்னு நான் பீல் பண்ணினேன். ஆஸ்பத்திரியில் போய் இருந்தேன். அவன எப்படியாவது காப்பாத்துங்கன்னு. ஆனா அங்க இருக்கிறவங்க, நீங்க இங்க இருந்தால் உங்கள அடிச்சுருவாங்க, கொன்னுருவாங்க நீங்க கிளம்புங்கன்னு சொன்னதால அங்கிருந்து வந்துட்டேன். மற்றப்படி நான் தலைமறைவாகவில்லை. இதில் என் தப்பு என்ன இருக்கிறது. 
 

காந்தி லலித்குமார் சகோதரர் உங்களை குற்றம் சாட்டுகிறாரே. நீங்க ஏமாற்றிவிட்டதாக கூறுகிறாரே
 

நான் எந்த வகையில் ஏமாற்றினேன். அவரோட சகோதரர், சகோதரிக்கு தெரியும் அவரால் நான் எப்படிப்பட்ட சித்ரவதையை அனுபவித்தேன் என்று. நான் எந்த வகையில் பொறுப்பு என்று எனக்கு தெரியவில்லை. 

உங்களிடம் இருந்து அவர் பணம் வாங்கியிருக்கிறாரா இல்லை நீங்க அவரிடம் பணம் வாங்கியிருக்கிறீர்களா

அப்படி எதுவும் இல்லை. செலவுக்கு பணம் கொடுப்பேன். அவ்வளவுதான். மற்றப் பெண்களிடம் நிறைய ஏமாற்றியிருக்கிறார். என்னிடம் உண்மையை லவ் பண்றதா சொல்லியிருக்கிறார். எனக்கு லவ்வும் வேணாம். இன்னொரு கல்யாணமும் வேணாமுன்னு நான் தெளிவாக இருந்தேன். 
 

எப்படி அறிமுகமானார்
 

சினிமா மூலமாகத்தான். நிறைய டைரக்டரிடம் போட்டோஸ் கொடுப்பதாக கூறி அறிமுகமானார். போக போக நல்லா பழகினோம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பொம்பள பொறுக்கி என்று தெரிந்து இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் நான் எப்படி அவனிடம் பழகுவது. என்னை ரொம்ப கேவலமா சோஷியல் மீடியாவில் போடுறாங்க. அபிராமியோட என்னை கம்பேர் பண்றாங்க... என கண்ணீரோடு கூறினார்.