Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; மனைவி கண்முன்னே கணவன் கொடூரக்கொலை

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Husband passed away in front of wife in Jolarpet

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான கோவிந்தராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கின்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை. நேற்று காலை கோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மர்மமான முறையில் உடம்பில், தலையில் காயங்களோடு இறந்து கிடந்தார். 

 

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கொலை குறித்த காரணம் மற்றும் கொலையாளி யார் என விசாரணை செய்தனர். வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன். திருமணத்தை மீறீய உறவால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மனைவி ஈஸ்வரியை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்,  அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கும் கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜனுடைய மனைவி ஈஸ்வரிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

 

ஓராண்டுக்கு முன்பு தனது கணவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு கோவிந்தசாமி உடன் ஊரை விட்டு ஓடி உள்ளார் ஈஸ்வரி. மனைவி காணாமல் போனதாக ஏலகிரி போலீசில் கோவிந்தராஜ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இருவரையும் தேடி கண்டுபிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்பின் கணவர் கோவிந்தராஜுடன் குடும்பம் நடத்தினாலும், மற்றொருபுறம் கோவிந்தசாமி உடனான திருமணத்தை மீறிய உறவை கை விடாமல் தொடர்ந்து வந்துள்ளார் ஈஸ்வரி. இதனால் கணவன் கோவிந்தராஜுக்கும் மனைவி ஈஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நவம்பர் நான்காம் தேதி நள்ளிரவு, ஈஸ்வரியும் கோவிந்தசாமியும் அருகிலிருந்த விவசாய நிலத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் தனிமையில் இருந்துள்ளனர். நள்ளிரவு வீட்டுக்குள் மனைவி இல்லையே என சந்தேகப்பட்டு தேடிய கணவர் கோவிந்தராஜ், மாட்டு கொட்டையில் இருவரும் இருப்பதை பார்த்து ஆத்திரமாகி அப்போதே சண்டை போட்டுள்ளார்.

 

எங்க சந்தோஷத்தை கெடுப்பதே நீதான் என அப்பொழுது அங்கிருந்த மண்வெட்டியை எடுத்த கோவிந்தசாமி, ஈஸ்வரி கண் முன்பே அவரது கணவர் கோவிந்தராஜை அடித்து கொலை செய்துள்ளார். அடித்து கொலை செய்துவிட்டு இருவரும் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

 

கோபால் என்கிற விவசாயி தனது நிலத்துக்கு வந்தபோது மாட்டு கொட்டகை வெளியே கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதே பார்த்துள்ளார், பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். அப்போது வீட்டிலிருந்து சாவகாசமாக கிளம்பி வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணவரை பார்த்து கண்ணீர் விட்டு அழுவது போல் டிராமா செய்துள்ளார் ஈஸ்வரி.  ஈஸ்வரியின் வாக்குமூலத்தை தொடர்ந்து ஏலகிரி போலீசார், அதே ஊரில் இருந்த கோவிந்தசாமியை கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.