Skip to main content

நான்கு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

four districts cm palanisamy visits

 

 

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

 

செப்டம்பர் 22- ஆம் தேதி காலை இராமநாதப்புரத்திலும், பிற்பகல் தூத்துக்குடியிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்கிறார். 

 

அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 23- ஆம் தேதி காலை கன்னியாகுமரியிலும், பிற்பகல் விருதுநகரிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்கிறார்.

 

மேலும் இம்மாத இறுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்