Skip to main content

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

five ias officers transfer tn govt order

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ்., தொழிற்துறைச் சிறப்பு செயலாளராக லில்லி ஐ.ஏ.எஸ்., தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ்., நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண் இயக்குநராக சங்கீதா, தமிழக சாலைகள் திட்டப் பணிகள் இயக்குநராக கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்