Skip to main content

என்னங்க நேர்மை நேர்மைன்னு... ஆளும் கட்சி டார்ச்சர்: செல்போனை தூக்கிப்போட்டு உடைத்த தாசில்தார்

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
tt1


கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சிவனடியார்களும், பொதுமக்களும் திட்டக்குடி தாசில்தாருக்கு புகார் கொடுத்திருந்தனர். 
 

இதையடுத்து சிவன் கோவிலுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்த கட்டிடங்களை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இடிக்கும் பணிகளை வருவாய் துறை மூலம் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கப்பட்டது. 
 

தாசில்தார் சத்யன் மற்றும் அதிகாரிகள் காவல்துறை உதவியோடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
 

 குளம் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு பகுதி, தெற்கு பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் அகற்றும் பணிகள் முடிவடைந்துள்ளது. 

 

ttt6


ஆனால் வடக்கு கரை பகுதியில் மட்டும் பணிகள் மந்த கதியில் நடந்தன. அதற்கு காரணம், அதிமுக பிரமுகர்களின் வீடுகள் அங்கு இருந்ததால் அதிகாரிகள் பணியில் மெத்தனம் காட்டியதாக சிவபக்தர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 
 

இந்த நிலையில் திட்டக்குடி தாசில்தார் சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் புதிய தாசில்தார் வந்து பணி ஏற்காததால், சத்யன் இன்னும் திட்டக்குடி தாசில்தாராக உள்ளார். 

 

sathiyan


 

ஆகையால் இன்று ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது, ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களிடம் இருந்து தாசில்தார் சத்யன் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. 
 

ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை கைவிடுமாறு தொந்தரவு செய்ததால், தனது செல்போனை தூக்கிப்போட்டு உடைத்தார். இருப்பினும் ஆளும் கட்சியினர் அவருடன் வந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு சத்யனை தொந்தரவு செய்துள்ளனர்.
 

ttt4


இதில் கோவப்பட்ட தாசில்தார் சத்யன், வரும் 22ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களாகவே காலி செய்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு புறப்பட்டார்.
 

இந்த நிலையில் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றாததை கண்டித்து இன்று திட்டக்குடி பஸ் நிலையம் முன்பு திடீரென்று விநாயகர் - சிவபெருமான் வேடமணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட சிவனடியார்களும் கலந்து கொண்டனர். 

 

tt8


 

மேலும், ஆக்கிரமிப்புகளை எடுக்கும் பணியில் தீவிரமாக இருந்தார் தாசில்தார் சத்யன். அவரை ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே இடமாற்றம் செய்து விட்டனர். அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ. சந்தோஷினி சந்திராவிடம் முறையிட்டுள்ளோம். எனவே தாசில்தாராக சத்யன் இருக்கும்போதே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம் என்றனர். 
 

திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரகுமார் எஸ்.ஸை. சீனிவாசன் தலைமையில் திட்டக்குடி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இனியாவது விரைந்து பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்பு எடுக்கப்படுமா? என்கிறார்கள் திட்டக்குடி பகுதி மக்கள் மற்றும் சிவனடியார்கள்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“செல்போனை ஒட்டுக் கேட்பது குற்றவாளிகள் செய்யும் செயல்” - ராகுல்காந்தி எம்.பி.

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்கள் அரசின் ஏற்பாட்டில் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சசி தரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகிய 4 எம்.பி.க்கள் உட்பட 10 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளது.

 

இவர்கள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கும் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “செல்போனை ஒட்டுக் கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள் செய்யும் செயல்” எனத் தெரிவித்தார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிய இளம்பெண் பலி!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Woman incident while talking on cell phone while charging

 

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், தனது 9 வயது மகனுடன் வசித்து வந்தார். கபிஸ்தலத்தில் கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோகிலா இன்று தனது கடையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது.

 

இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில், கோகிலா கத்திக் கூச்சலிட்டுள்ளார். அதே சமயம் கடை முழுவதும் தீ பரவியதால் பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோகிலாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பாபநாசம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.