Skip to main content

22 ஆவின் நிறுவனங்களில் ஊழல்! பால்வளத்துறை அமைச்சர் அதிரடி!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

Corruption in 22 Spiritual Institutions! Dairy Minister in action!
                                                         கோப்புப் படம் 


தமிழ்நாட்டில் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியில் செயல்பட்டுவரும் ஆவின் பால் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) நேரில் ஆய்வுசெய்தார். முன்னதாக அவர், பால் முகவர்களிடம் பால் வரத்து, சந்தைப்படுத்தலில் உள்ள சவால்கள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

 

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் நாசர் ஊடகத்தினரிடம் கூறியதாவது: "தமிழகத்தில் பால் உற்பத்தி, விற்பனை 1.50 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிப்படி, பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த ஆட்சியின்போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதேபோல 636 முதுநிலை, இளநிலை பணியாளர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்ததையடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் பால் வழங்குவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். பணிக்காலத்தில் இறந்த 48 ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

 

சென்னையில் பால் விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பழைய விலையிலேயே விற்றுவந்த 22 நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ஆவினில் ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். 

 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில், கடந்த தீபாவளி பண்டிகையின்போது 1.50 டன் அளவுக்கு இனிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்." இவ்வாறு அமைச்சர் ஆவடி நாசர் கூறினார். 

 

ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன், பார்த்திபன் எம்.பி, ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி, சேலம் ஆவின் பொது மேலாளர் நர்மதா தேவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.