Skip to main content

கரோனா அச்சம்- சென்னையில் 10 விமானங்கள் ரத்து!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

coronavirus reflected chennai airport 10 flights cancel

இந்த நிலையில் கரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் 40% குறைந்துள்ளன. அதேபோல் குவைத், ஹாங்காங், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்களின் வருகையும், பயணிகளின் வருகையும் குறைந்துள்ளதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்