Skip to main content

'மக்களை பட்டினிப் போட்டு கொல்கிறீர்களா?'-கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Are you starving the people?'- a heated argument in the village council meeting

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளகுட்டை, நிம்மியம்பட்டு, ஜாப்ராபாத் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் இன்று கலைஞர் கனவு இல்லத்தின் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. வெள்ளகுட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்றது.இதில் மண்டல துணை   வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் கலந்து கொண்டு கலைஞர் கனவு இல்லத்தின்  திட்டங்கள்  குறித்து கிராம மக்கள் மத்தியில் விளக்கமளித்தனர்.

பின்னர் அங்கு கூட்டத்திற்கு வந்திருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பேசிய போது, இந்த கிராமத்தில் தலைவர் வார்டு உறுப்பினர் என அனைவரும் இருந்தும் இந்த கிராமத்தில் வளர்ச்சி இல்லை, கிராம சபா கூட்டத்திற்கு  கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுப்பதில்லை , பெயரளவுக்கு 4 துண்டு பிரசுரங்கள் மட்டும்  அச்சடிக்கப்பட்டு வருகிறது என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். மேலும்  சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் கொடுக்கிறீர்கள் அவர்கள் குடும்ப நலனை மட்டும் பார்க்கும் நீங்கள் வசதி இல்லாத ஏழை எளிய மக்களுக்கும்  கிராம மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பருப்பு பாமாயில் ஆகியவை சரியாக வழங்கப்படுவதில்லை. கிராம மக்களுக்கு எந்த  உதவிகள் செய்யாமல் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் விடியல் ஆட்சி என்று கூறி மக்களை பட்டினி போட்டு சாவடிக்கிறீர்களா? என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்து ஊராட்சி நிர்வாகத்திடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு அதற்குப் பதிலளித்த ஊராட்சி நிர்வாகத்தினர் அடுத்த முறை அதிகமாக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குகிறோம் என்று கூறினார். அதற்கு அவர் உங்கள் ஆட்சியே முடியும் என்று நக்கலாக பதில் அளித்தார். பின்னர் அவசர அவசரமாக கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கிராம சபை கூட்டம் முடிக்கப்பட்டது. நான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் வழங்காமல் ஏன் அவசர அவசரமாக கூட்டத்தை முடிக்கிறீர்களா என்று கூறி மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

புளியமரத்தில் மோதி அரசு பேருந்து விபத்து; 18க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Govt bus crash into tamarind tree; More than 18 people were injured

அண்மையாகவே அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதுபட்டு சாலையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து புளிய மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாட்றம்பள்ளியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கட்டேரியம்மன் கோவில் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்துக்கு நேர் எதிராக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுப்பதற்காக பேருந்து ஓட்டுநர் ஜீவா பேருந்தை சடாரென திருப்பியுள்ளார். அப்பொழுது சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் அரசு பேருந்து மோதி நின்றது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பயணித்த பயணிகள் 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

வியாபாரியை வழிமறித்து 30 லட்சம் ரூபாய் வழிப்பறி; 4 பேர் கைது

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
30 lakh rupees were stolen by waylaying the trader; 4 arrested

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை மசூதி தெருவைச் சேர்ந்தவர் பராஸ் அகமது (29). இவர் ஆம்பூரில் பழைய இரும்பு மற்றும் தோல்பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் பலர் இவருடைய கடையில் இருந்து இரும்பு, தோல்பொருட்களை தவணையில் வாங்கி செல்வதும், அதற்கான பணத்தை சில நாட்களில் பராஸ் அகமது நேரில் சென்று வசூலிப்பது வழக்கம்.

அதன்படி கடந்த 7-ம் தேதி இரவு பராஸ் அகமது வேலூர் பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் கடை வைத்துள்ள சில வியாபாரிகளிடம் கொடுத்த பொருட்களுக்கான பணத்தை வசூலிப்பதற்காக ஆம்பூரில் இருந்து காரில் வந்துள்ளார். பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் காரை நிறுத்தி விட்டு அவர் அங்குள்ள வியாபாரிகளிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை வசூல்செய்து அதனை ஒரு பையில் வைத்து கொண்டு பராஸ் அகமது காரை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது  2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் திடீரென அவரை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் பாரஸ் அகமது வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாரஸ் அகமது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் சப்&இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோர் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தொடர் விசாரணை  நடத்தி வழிபறியில் ஈடுபட்ட வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சரத்குமார் (28), தினேஷ் (30), பிரசாந்த் (26), கோகுல் (26) ஆகிய 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூபாய் 22-லட்சம் பணத்தைய மற்றும் 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் இது போல் வேறு ஏதாவது கொள்ளை வழக்கில் சிக்கி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.