Published on 23/11/2022 | Edited on 23/11/2022
கோப்புப்படம்
சென்னை திருவல்லிக்கேணியில் அரசு மகளிர் பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த நிர்மலா, சுரேஷ் ஆகிய இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் குறிப்பிட்ட சுவர் அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள், ஒரு ஆட்டோ ஆகியவை இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.