Skip to main content

தமிழகத்தில் 85% மின்னணு குடும்ப அட்டைகள் விநியோகம்

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
தமிழகத்தில் 85% மின்னணு குடும்ப அட்டைகள் விநியோகம்

தமிழகத்தில் இதுவரை 85 சதவீதம் பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று வரை 1.63 கோடி மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகளின் புகைப்படம் பெற வேண்டியது, ஆதார் விவரங்கள் சரிபார்த்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடித்து அனைவருக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து அளிக்கப்படும். பொது விநியோகத் திட்டம் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குறைகளுக்கு இணையவழி சேவை மூலமாக தீர்வு காண வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

சார்ந்த செய்திகள்