Skip to main content

 7 கோடி ஊழல் - சிதம்பரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு 

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
chi

 

சிதம்பரம் நகராட்சி குடிநீர் குழாய், மீட்டர் அமைத்தது, வடிகால் பணியில் ரூ 7 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

chi

 

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் நகராட்சியில் உள்ள 5300 வீடுகளுக்கு புதிய பித்தளையிலான குடிநீர் குழாய், குடிநீர் மீட்டர் பொறுத்தி குடிநீர் இணைப்பு கொடுக்கவேண்டும். ஆனால் குடிநீர் வடிகால் அதிகாரிகள் 500க்கும் குறைவான வீடுகளுக்கு பிளாஸ்டிக் குடிநீர் குழாய், குடிநீர் மீட்டரை பொருத்திவிட்டு மீதியுள்ள வீடுகளுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக கணக்கு கட்டி ரூ1 கோடியே 20 லட்சத்தை ஊழல் செய்துள்ளனர். மேலும் நளன்புத்தூர் கிராமத்தில் குடிநீர் கிணறு அமைத்தது, பாதள சாக்கடை திட்டம்  உள்ளிட்டவைகளில் ஊழல் நடக்கிறது. தரமான பொருட்களை கொண்டு கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் நகர வர்த்தக சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிதம்பரம் நகருக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டதை நடத்தினார்கள்.

 

இச்சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சதிஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இதுகுறித்து ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளில் ரூ 7 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் காசிநாதன், விஜயலட்சுமி. உதவி செயற்பொறியாளர்கள் விஜயக்குமார், பாண்டியன், அசோகன் ஆகியோர் மீதும் சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் மீதும் மோசடி,கூட்டுகொள்ளை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிந்துள்ளது கடலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

chi

 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழக முழுவதும் நடைபெறும் குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகளில் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனையொட்டி தான் சிதம்பரம், மற்றும் ஆத்தூர் நகராட்சியில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி பல கோடிகளை சுருட்டியுள்ளனர். சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பாதள சாக்கடை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடந்து வரும் பணிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

வழக்கு பதிவு செய்யப்பட்ட பொறியாளர்களிடம் இதுகுறித்து கேட்ட போது திட்டபணிகளில் என்ன கொடுத்துள்ளதோ அதனை செய்துள்ளோம். குடிநீர் குழாய்,மீட்டர் குறித்து தகவல் அறியும் சட்ட மூலம் கேட்டு இருந்தார்கள் அதற்கான விளக்கத்தை எழுத்து மூலமாக தெளிவாக கொடுத்துள்ளோம். சிலர் தொழிற்நுட்ப ரீதியில் புரிந்துகொள்ளமுடியாமல் குற்றசாட்டை கூறி வருகிறார்கள். வழக்கின் விசாரணையில் இதுகுறித்து எடுத்து கூறுவோம் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.