Skip to main content

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு உட்பட நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம்; கடற்கரையிலிருந்து 250- க்கும் அதிகமான விசைப்படகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன் இரவு கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த செல்வமணி(55)என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் தமிழ்செல்வன்(55) அப்பத்துரை(52) ரெங்கசாமி(45)
ஜூவா(55) ஆகியோர் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஓரு விசைப்படகு மற்றும் நான்கு மீனவர்களை கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் புதுகை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்