Skip to main content

கிரடாய் அமைப்பு சார்பில் 3 நாட்கள் வீடுகள் கண்காட்சி

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

3 days house exhibition organized by credai organization

 

திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2022 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி  ஆகஸ்ட்13 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருச்சியில் நடைபெற உள்ளது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் கட்டுமானத் துறையில் கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) முக்கிய அங்கமாக உள்ளது.

 

அனைத்து வகையான மக்களுக்கும் சிறப்பான முறையில் வீடுகளை கட்டித் தருவதற்காக 1999-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், இந்திய அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் ஒரு அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வீடுகளின் கண்காட்சி, தற்போது 7-வது ஆண்டாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ‘ஃபேர்ப்ரோ-2022 என்ற பெயரில் ஆகஸ்டு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

 

திருச்சி கிரடாய் அமைப்பு குறித்து அதன் தலைவர் ஆர்.எஸ்.ரவி கூறியதாவது, “மக்களுக்கு வீடுகள் குறித்த தொழில்நுட்ப விழிப்புணர்வை உருவாக்குதல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வீட்டில் செய்ய வேண்டிய வழிமுறைகள், கட்டிடத்தின் பரப்பளவைக் கணக்கிடுதல், இடத்தின் சட்டப்பூர்வ ஆவணங்களை ஆராய்தல் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுதல் போன்றவையே கிரடாய் அமைப்பின் முக்கிய நோக்கம்.  சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் 9  இடங்களில் கிரடாய் அமைப்பு உள்ளது.

 

இதில், எங்களது திருச்சி அமைப்பில் 50க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும், இந்த அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள நடத்தைக் குறியீடு (Code Of Conduct), வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றைப் பின்பற்றுவார்கள். ஒவ்வொரு மீட்டிங்கின் போதும் இதை உறுப்பினர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.  அதனால், எங்களால் வீடுகள் தரமானதாகவும், உரிய நேரத்திலும் கட்டித் தரப்படுகின்றன.  வாடிக்கையாளர்களுக்கு வீடுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு, எங்கள் அமைப்பில் புகார் தெரிவித்தால் அதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 

 

இதன் மூலம் வீடு வாங்குபவர்களும் பாதுகாப்பாக உணர்வார்கள்.  மேலும், அரசு புதிய விதிமுறைகளை வகுக்கும்போது, எங்களது தேசிய மற்றும் மாநில அமைப்புகள் மூலமாக உடனடியாக எங்களுக்கு தெரியவந்துவிடும். அதை உடனடியாக நாங்கள் அமல்படுத்துவதுடன், எங்களது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி, மக்களுக்கும் கொண்டு சேர்த்துவிடுகிறோம்.  மானியத்துடன் அரசு அறிவிக்கும் வீடு கட்டுவதற்கான திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அத்திட்டத்தில் உள்ள வட்டி வீதம், சிறப்பு சலுகைகள் குறித்து வங்கிகளிடம் கேட்டறிந்து வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கிறோம். அரசுத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாகவே செயல்படுகிறோம்.  மேலும், கட்டுமான தொழிலில் உள்ள எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.

 

வழக்கமான 80-சி பிரிவின் கீழ் கிடைக்கும் சலுகைகளும் பொருந்தும். நடைமுறைக்கு வந்துள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தொடர் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் வருங்காலங்களில் நிச்சயம் வீடுகளின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அதே சமயம்  குறைந்த வட்டி விகிதம், வங்கிகளின் சலுகைகள், மத்திய அரசின் மானியம் உள்ளிட்ட பல்வேறு சாதகமான சூழ்நிலைகளால் சொந்த வீடு வாங்குவதற்கு இதுவே சரியான தருணம். அதற்கான வாய்ப்பை கிரடாய் திருச்சி 3 நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.  இதன் மூலம் குறைந்த விலையில் தரமான நம்பிக்கையான வீடுகள் வாங்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

 

திருச்சி கிரடாயின் சேர்மன் வி. கோபிநாதன் கூறியதாவது, “7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை 30 நிறுவனத்தினர் காட்சிப்படுத்த உள்ளனர். எங்களுக்கு வீடுகளை விற்பதற்கு இணையதளம், செய்தித்தாள், விளம்பரம் என பல வழிகள் உள்ளன. ஆனால், வீடு வாங்குபவர்களுக்கு எங்கு வீடுகள் உள்ளன? யாரிடம் வாங்குவது என தெரியாது. எனவே, வாடிக்கையாளர்களுக்கான சேவையாகத் தான் இக்கண்காட்சியை நடத்துகிறோம்.

 

கிரடாய் அமைப்பில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால், என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் எங்கள் கண்காட்சியில் உள்ளன. வங்கியில் கடன் கேட்டு கிடைக்குமா என தெரியாமல் காத்திருப்பதைவிட இக்கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டிவீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெற முடியும். 

 

மேலும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ள வீடுகள் அனைத்தும் வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்டவை. இதற்காக 5 வங்கிகள் இங்கு முகாமிட்டுள்ளன. அவர்களிடம் உங்களது வருமானத்தின் அடிப்படையில் கடனுதவி பற்றி கேட்டுவிட்டு, பின்னர் வீடு வாங்குவதற்கான பட்ஜெட்டை தயார் செய்யலாம். வீடு வாங்குபவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

 

இந்த கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு எங்களது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றனர். முறையான கட்டிட அனுமதி, தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வீடுகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இங்கு தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் உள்ளன” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.