Skip to main content

16 வயது சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை! - 5 பேர் கைது!

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
thiru


புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணித்த சென்ற போது விக்கி என்கிற இளைஞன் சந்தியாவிடம் நெருங்கி பழகி உள்ளான்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தியாவை விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அருகில் ஒரு தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி அங்கு வைத்து, ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளான். மேலும் அவற்றை மொபைல் வீடியோவில் படம்பிடித்து வைத்துக் கொண்ட விக்கி அதை வைத்து மிரட்டி சிறுமியிடம் அடிக்கடி முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை தெரிந்து கொண்ட அவனது நண்பர்கள் சிலர் தமக்கும் சந்தியாவை விருந்தாக்க கேட்டுள்ளனர். அதனால் சிறுமியை திருக்கண்ணூர் என்ற இடத்தில் அடைத்திற்கு அழைத்து சென்ற விக்கி, அங்கு அடைத்து வைத்து, மிரட்டி தனது நண்பர்களுடன் சிறுமி சந்தியாவை கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்த போதுதான் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்தது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புதுச்சேரி திருக்கணூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் அந்த காவல்நிலைய போலீசார், சம்பவம் நடந்த இடம் தமிழகத்தில் உள்ள வழுதாவூர் பகுதி என்பதால் அங்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் எங்கு புகார் செய்வதென்று தவித்த சிறுமியின் குடும்பத்தினர் புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் கூறினர். குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை விசாரித்து பதிவு செய்து கொண்டபின் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை முதலில் சீரழித்த விக்கியையும், கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் தொடர்புடைய விக்கியின் நண்பர்கள் 7 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியில் பதுங்கியிருந்த சிறுமியின் காதலன் விக்கி, அவனது நண்பர்கள் முகிலன், கண்ணதாசன், சூர்யா, தேவா ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூர நிகழ்வின் காயம் ஆறுவதற்குள் புதுச்சேரியில் 16 வயது சிறுமியை 8 பேர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி கொடூரம் நிகழ்த்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

 

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.