Skip to main content

+1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த +1 மாணவ, மாணவிகள் 9 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

 

அதைத் தொடர்ந்து மறைந்த பத்திரிகையாளர் ஆர்.மோகன் குடும்பத்திற்கு பத்திரிகையாளர் குடும்ப நல திட்டத்தில் இருந்து ரூபாய் 2 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். 

 

2020- 21 கல்வியாண்டில் 2,38,456 மாணவர்கள், 3,06,710 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்