Skip to main content

நிதி நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி கொள்ளை; சிசிடிவி வீடியோ காட்சிகள் மூலம் கைது!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

சென்னை மதுராந்தகத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பாலசுபரமணியன். இவர் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளர்களிடம் நேரில் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்துடன் இரவு எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் திடீரென பாலசுப்ரமணியனை வழிமறித்து கத்தியால் வெட்டியது.

 

robbery

 

இதில் படுகாயம் அடைந்தவர் அலறியபடி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அக்கும்பல் பாலசுப்ரமணியனிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது.

 

வெட்டுப்பட்டு, படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழிப்பறியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

 

 

அதில் சினிமாவில் வருவது போல் பாலசுப்பிரமணியனை வழிமறித்த கொள்ளை கும்பல் அவரை தாக்கி, கத்தியால் வெட்டிய  காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை செய்ததில் தர்மபுரியை சேர்ந்த சரவணன், மதுபாலா, கதிர்காமத்தை சேர்ந்த கந்தவேலு, ஐயங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அஜித், கல்மேடுபேட்டை சேர்ந்த சுதன் ஆகிய 5 பேர்தான் பாலசுப்பிரமணியனை தாக்கி பணப்பை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலிசார் சரவணன், மதுபாலா, கந்தவேலு, அஜித் ஆகிய 4 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் கூட்டாளியான கல்மேடுபேட் சுதனை தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் பணம்,  3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.