Skip to main content

”நாசர் பற்றி இதை வெளில சொல்லலாமான்னு தெரியல...” - யூகி சேது சொன்ன விசயம், அதிர்ந்து சிரித்த அரங்கம்

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

Yugi Sethu talk about nassar

 

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம் டக்கு முக்கு டிக்கு தாளம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க, முனீஸ்காந்த், மன்சூர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தங்கர்பச்சான், விஜித் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், கஸ்தூரி ராஜா, பேரரசு, நடிகர்கள் நாசர், யோகி சேது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விழாவில் நாசர் குறித்து பேசிய யூகி சேதுவின் பேச்சு அரங்கத்தினரை சிரிக்க வைத்தது.  

 

யூகி சேது பேசுகையில், "எல்லோரையும் பேசவிட்டு கடைசியா என்ன கூப்டு டைம் இல்லன்னு அனுப்பிருவாங்கன்னு நினைச்சேன். ஏன்னா எல்லாரும் பேசும்போது  வாட்ச்ச பாப்பாங்க. ஆனா நான் பேசும் போது காலண்டரை பாக்கணும். எல்லாருக்கும் வணக்கம், நானும், தங்கரும் க்ளாஸ்மேட். அவன் ஒளிப்பதிவுல தங்கப்பதக்கம் வாங்கிருக்கான், நான் இயக்கத்தில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கேன்.  நானு, தங்கர்பச்சான், நாசர் மூணு பேரும் என்னோட ஆபிஸ்லதான் தங்கியிருப்போம். அப்பப்போ ரகுவரன் வந்துட்டு போவாரு. இதை சொல்லலாமான்னு தெரியல. நாங்கெல்லாம் எங்க ஜட்டி பனியனை கொடியில் காயப்போடுவோம், ஆனால் நாசர் மட்டும் அவரோட அண்ட்ராயரை 20 அடி நீளமுள்ள கொடியில் தான் காயபோடுவார். அது ரொம்ப பெருசா இருக்கும், கவனமாக பாதுகாத்து வச்சிருப்பாரு. இந்த தங்கர் என்ன பண்ணுவாருன்னா பத்தரகோட்டையில இருந்து கிலோ கிலோவா முந்திரிக்கொட்டை வாங்கிட்டு வந்து சாப்டு சேதுனு சொல்லுவார். இதுல பார்த்தீங்கன்னா இவன் சின்ன வயசுல இருந்து தன்னோட மாமா பொண்ண டாவடிச்சு கல்யாணம் பண்ணிகிட்டான். அதேபோல் நாசரும் ஒரே பொண்ணதான் காதலிச்சாரு, அவங்களையே கல்யாணமும் பண்ணிகிட்டாரு. ஆனால் முந்திரிகொட்டைய மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க. அதனால என் வாழ்க்கையில ஏதும் தவறு பண்ணிருந்தா அதுக்கு காரணம் இந்தப் பத்தரக்கோட்டை முந்திரின்னு தான் சொல்லுவேன். இதுல வெங்காயம் வேற அதிகம் சாப்பிடு சேதுன்னு தங்கர் சொல்லுவார். அப்பேற்பட்ட தங்கர் பெற்றதுதான் இந்த விஜித். என்ன ஒரு விசித்திரமான பெயர்ல. அவரோட சிரிப்பை பாருங்க தங்கர்பச்சான மாதிரியே இருக்கும். நாங்கெல்லாம் ஒரு இடத்துல இருக்கும் போது ஒரே சிரிப்பா இருந்ததுன்னா அங்க தங்கர் இருக்கான்னு அர்த்தம்.  ஒரு பைசா பெறாத விஷயத்தைக்கூட பேசும் விதத்திலேயே எல்லாருக்கும் சிரிப்பை வர வைக்கக்கூடிய மாபெரும் நடிகர் தங்கர். ஒரு மேட்டரும் இல்லாம சிரிக்க வைக்கக்கூடிய தகுதி தங்கருக்கு உண்டு. ஒரு மேட்டர்ல சிரிக்க கூடிய தகுதி எஸ்.ஜே சூர்யாவுக்கு மட்டுமே உண்டு. நாமெல்லாம் அப்படி சிரிச்சா போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்க. நாய் குரைக்கும். தங்கரிடம் இருக்கும் அதே சிரிப்பு விஜித்கிட்ட இருக்கு. அவரின் வெற்றிக்கு சிரிப்பு மட்டுமே போதும் என்று நம்புகிறேன். ஒருவேளை சிரிச்சிட்டே இருடா விஜித்து எவனும் கவனிக்கமாட்டானு தங்கரு கத்துக்கொடுத்த டெக்னீக்கா இருக்கும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்; நேற்று அழுதுட்டேன்' - தங்கர் பச்சான் பேட்டி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
pmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கடலூரில் வாக்கு சேகரிப்புக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், ''கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனால், உள்ளூரில் இருக்கின்ற சாலைகள் எல்லாம் போய்ப் பாருங்கள். உள்ளே இருக்கக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு தரமற்ற நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதைப் பாருங்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் மேல் பிரச்சனை இல்லை. பிரச்சனை மக்களிடம் இருக்கிறது.

இந்த மக்கள் எனக்கான வசதியை செய்து கொடுக்காமல் ஊருக்குள்ள வந்து ஓட்டு கேட்காதீர்கள் என ஏன் கேட்கவில்லை. என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள். தொடர்ந்து வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு கொண்டே இருந்தீர்களா? நீங்கள் ஓட்டுப் போடணும் என்ற அவசியமே கிடையாது. எலக்சன் எதற்கு தெரியுமா வைக்கிறாங்க? உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பிரச்சனை இருந்தால், யார் நமக்கு வந்தால் செய்வார்கள், யார் திறமைசாலி என்று பார்த்து ஓட்டு போட வேண்டும். அப்படி பார்த்து ஓட்டு போட்டுள்ளீர்களா? பணம் கொடுக்குறவங்க 20 கார்ல அடியாள் மாதிரி ஆளுங்கள கூட்டிக்கிட்டு வர்றாங்க. இதே மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தா என்ன கிடைக்கும்?  நான் இந்த மண்ணிற்கான ஆளாக இருந்தாலும் சில ஊர்களை நான் பார்த்து அழுதுவிட்டேன். கேட்டால் அமைச்சர் அந்த ஊரிலேயே இருக்கிறார். அவர் பத்து வருஷமாக அமைச்சராக இருந்திருக்கிறார். ஒரு பேருந்து வசதி கிடையாது. எந்த வசதியும் கிடையாது. மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.