Skip to main content

மாலில் நகை திருடிய இளம் நடிகை! போலீஸார் அதிர்ச்சி...

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

சினேகலாதா பாட்டில் என்கிற 25 வயது மாராத்தி இளம் நடிகை மாலில் மோதிரம் திருடியதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனே போலீஸால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

actress

 

 

இந்த இளம் நடிகை கைது செய்யப்பட்ட பின்னர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

புனே குற்றவியல் பிரிவை சேர்ந்த டிசிபி பச்சன் சிங் இதுகுறித்து பேசுகையில், “லஷ்கர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட திருட்டு புகாரால் இவரை ஐபிசி 380ன் கீழ் கைது செய்துள்ளோம். 
 

day night


இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள திருடுபோன 50,000 மதிப்புள்ள இரண்டு மோதிரங்களுடன் இவரை கண்டுபிடித்துள்ளோம். விசாரணையில் மோதிரத்தை திருடியவர் சினேகலதா வசந்த் பாட்டில்” என்று தெரிய வந்துள்ளது. 

போலீஸ் விசாரணையில் தான் ஒரு இளம் நடிகை என்று தெரிவித்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் நடைபெற்ற விசாரணையில் மூன்று படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கை புனே இரண்டாம் யுனிட் போலீஸார் விசாரித்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முதல் நீ முடிவும் நீ...’ - மணமுடித்த மீதா ரகுநாத்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024

 

தர்புகா சிவா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான குட் நைட் படத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த மாதம் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இதையடுத்து இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அவருக்கு தற்போது திரை பிரபலங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகும் பூர்ணிமா ரவி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
actress poornima ravi update

யூட்பில் பிரபலமான பூர்ணிமா ரவி தற்போது சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் தனக்குப் பிடித்த நடிகர் என தனுஷைக் குறிப்பிடுபவர், எந்த கதாபாத்திரத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லைக்கும் தனுஷ் செல்வது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றார். 

இதேபோன்ற நடிப்புத் திறமை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருப்பதாக பூர்ணிமா கூறுகிறார். ’ஹீரோயின் மெட்டீரியல்' என்று சினிமாவில் எதுவும் இல்லை என்பவர், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.