Skip to main content

விஜய் ரசிகர்களை போல் களத்தில் இறங்கிய யோகிபாபு ரசிகர்கள்

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

கொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க போலீசார் முகக் கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்கள், தூய்மை பணியாளர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்து தங்கள் சேவையை திறன்பட செய்து வருகின்றனர்.

 

cnc

 

 

இந்நிலையில் சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் கருதாது நேரம் காலம் பாராது ஈடுபட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மாஸ்க் வாங்கிக்கொடுத்து தங்களால் இயன்ற சமூக சேவையைக் தொடங்கி இருக்கிறார்கள் யோகி பாபு ரசிகர்கள். சென்னையில் மட்டும் 2000 பேருக்கு 'மாஸ்க்' வழங்கி இருக்கிறார்கள். இந்த பணி மேலும் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முகக் கவசங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்