Skip to main content

"நான் குடித்திருந்தால் இந்நேரம் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பேன்" - யாஷிகா விளக்கம்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

htdhjdth

 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார், நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில், அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், விபத்திற்குப் பிறகு கண்விழித்த நடிகை யாஷிகா, விபத்தின்போது தான் வாகனம் ஓட்டியது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். வண்டி ஓட்டும்போது நான் குடித்திருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். நான் குடிக்கவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் குடித்திருந்தால், இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருந்திருப்பேன். மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன். போலியான நபர்கள் போலியான செய்திகளைப் பரப்புவது நீண்ட நாட்களாக நடந்துவருகிறது. ஆனால், இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். இதில் நீங்கள் கொஞ்சம் மனிதத்தன்மையையும், இறந்த என் தோழியின்பால் கொஞ்சம் துக்கத்தையும் காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மருத்துவர்களின் அறிக்கையும் இதைத்தான் சொல்கிறது. போலியான ஊடகங்கள் அதிகப் பார்வைகளைப் பெறவும், சப்ஸ்க்ரைபர்களைப் பெறவும் இப்படி போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர்களெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக நான் சிலர் மீது அவதூறு வழக்கு தொடுத்தேன். ஆனால் இதுபோன்ற கிசுகிசு செய்திகள் வேண்டுமென்றால் அந்த நபர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

 

kbjvjhvg

 

என் இடுப்பு எலும்பில் பல முறிவுகள் ஏற்பட்டுள்ளன. வலது கால் முறிந்துள்ளது. என் காயங்களுக்கான அறுவை சிகிச்சை முடிந்து நான் ஓய்வில் இருக்கிறேன். அடுத்த ஐந்து மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ நடக்கவோ கூட முடியாது. நாளெல்லாம் படுக்கையில்தான் இருக்கிறேன். அதிலிருந்தபடியேதான் எனது இயற்கை உபாதைகளையும் கழிக்க வேண்டும். என்னால் எந்தப் பக்கமும் திரும்ப முடியவில்லை. இப்படியேதான் பல நாட்களாக விறைப்பாக இருக்கிறேன். என் பின்பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக எனது முகத்துக்கு எதுவும் ஆகவில்லை. அதனால், இது கண்டிப்பாக எனக்கு மறுபிறவிதான். ஆனால், இப்படி ஒரு மறுபிறவியை நான் கேட்கவில்லை. உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் காயப்பட்டிருக்கிறேன். கடவுள் என்னைத் தண்டித்திருக்கிறார். நான் இழந்தவற்றைவிட இந்தத் தண்டனை எனக்குப் பெரிய விஷயம் இல்லை" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எஸ்.ஜே சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

Release date announcement of SJ Surya film; The film crew released the new posters

 

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் 'கடமையை செய்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு, அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது. 

 

 

 

Next Story

"எனக்கு லவ் எல்லாம் செட்டாகாது" - திருமணத்தை அறிவித்த யாஷிகா ஆனந்த்

Published on 01/04/2022 | Edited on 02/04/2022

 

Yashika announces his marriage

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'சாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தியை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இது செட்டில்ட் ஆக வேண்டிய நேரம். சினிமா எனக்கு பிடிக்கும், அதனால் உங்களை தொடர்ந்து மகிழ்விப்பேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், லவ் எல்லாம் செட் ஆகாது" எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் யாஷிகாவின் அடுத்த பதிவில், "வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்து எனக் கூறி, தற்போது எனக்கு திருமணம் இல்லை" எனத்  தெரிவித்துள்ளார்.