Skip to main content

“மனம் ஏற்க மறுக்கிறது” - கண் கலங்கிய வெற்றிமாறன்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
vetrimaaran about vetri duraisamy

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 40க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தார். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமானதை தொடர்ந்து 8 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) அவரது உடல் மீட்கப்பட்டது. பின்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்பு தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெற்றி துரைசாமி செயலாளராக இருந்த ஐஐஎஃப்சி (பன்னாட்டு திரை - பண்பாட்டு ஆய்வகம்) சார்பில் நினைவு அஞ்சலி செய்யப்பட்டது. இதில் ஐஐஎஃப்சி-யின் தலைவர் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்பு பேசிய அவர், “வெற்றி துரைசாமி எங்கு அவரை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் வெற்றிமாறனின் மாணவர் தான் என்று சொல்வார். எங்கிட்ட தான் சினிமா கத்துக்கிட்டதாகவும் சொல்லுவார். உண்மையிலே நான் தான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். எங்க இரண்டு பேருக்கும் பறைவைகள், விலங்குகள் என நிறைய விஷயங்களில் ஆர்வம் என்பது பொதுவாக இருக்கும். அந்த ஆர்வங்களை பத்தி நிறைய தெரிஞ்சி வச்சிக்கிறது மட்டுமில்லாமல், அதற்காக ஒரு தேடல் இருக்குற மனிதர். நல்ல ஒயிட்லைஃப் போட்டோகிராஃபரும் கூட அவர். போன வருஷம் ஆப்ரிகா போயிட்டு கொரில்லா குடும்பத்தை போட்டோ எடுத்திருக்கிறார். அதனுடைய தொடர்ச்சி தான் இந்த பயணமும்.

கடந்த 11 வருஷமா நான் என்ன செய்தாலும் அவருடைய பங்களிப்பு ஏதோ ஒரு விதத்தில் இருக்கும். அதனுடைய உச்சம்தான் ஐஐஎஃப்சி. அதை ஆரம்பிக்க முடிவு செய்தபோது, எந்த தயக்கமும் இல்லாமல் ஆரம்பிக்கலாம் என சொல்லி இடம் கொடுத்தார். எல்லாருக்குமே உதவி செய்து, அந்த பழக்கத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் இதை செய்ய முடியும். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் ஏற்க மறுக்குது. வெற்றி துரைசாமியின் நினைவாக ஐஐஎஃப்சி சார்பில்,  தமிழில் முதல் திரைப்படம் எடுப்பவர்களுக்கு ஒரு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒயிட்லைஃப் போட்டோகிராப் சம்பந்தமாகவும் ஒரு விருது வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று கண் கலங்கியபடி உருக்கமுடன் பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.