Skip to main content

”எங்க வீட்டில் நடந்த ரஜினி பட ஷூட்டிங்” - சுகாசினி சுவாரஸ்ய பேச்சு

Published on 10/07/2019 | Edited on 11/07/2019

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 89வது பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாசினி, ஆர்.பார்த்திபன், இயக்குநர் வசந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு பாலசந்தர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். 
 

sugasini

 

 

அப்போது பேசிய நடிகை சுகாசினி பாலசந்தரின் கவிதாலயா பலருக்கு சினிமா கற்றுக்கொடுத்த கல்லூரியாக இருந்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்திற்கும் சினிமா கற்றுக்கொடுத்துள்ளது என்று அந்த நினைவுகளை பகிர்ந்தார். 
 

மேலும் அப்போது பேசியவர், “நான் முதன் முதலாக பார்த்த ஷூட்டிங் மூன்று முடிச்சு, அது எங்க வீட்டில்தான் நடைபெற்றது. துணி துவைக்கும் சீன் ஒன்று படத்தில் வரும், அதை எங்கள் வீட்டு பின்புறம்தான் எடுக்கப்பட்டது. அது ஒரு நல்ல நாஸ்டால்ஜியா. கலாகேந்திரா கார் வரும் அதில் ரஜினி சார், அடுத்து ஸ்ரீவித்யா, கடைசியாக கமல் சாரை பிக்கப் செய்துகொண்டு வரும். ரஜினி சாருக்கு அப்போது ரொம்ப பயமாக இருப்பார். ஏன் ஏன்றால் அப்போது அவர் புதிது என்பதால் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். எங்க கதவுக்கிட்டயே சிகரெட் பிடிச்சிட்டு சுற்றிக்கொண்டிருப்பார். அந்த காட்சிகள் எல்லாம் இன்னும் எனக்கு நினவிருக்கிறது. 
 

ஈராங்கி ஷர்மா ஒரு விஷயம் சொல்லியது நியாபகம் வருகிறது. ஈராங்கி ஷர்மா, கையை உயர்த்தி ரஜினிக்கு லுக் பார்க்க வைப்பாராம். அப்போதெல்லாம் ரஜினிக்கு லுக் மிகவும் சிரமமாக இருக்கும். ஒருவேளை கே.பாலசந்தர் சாரை பார்த்து பயமாக இருக்கும்போல, பிரேமை பார்த்துக்கொண்டிருந்த ரஜினி திடீரென கீழே குனிந்துவிட்டாராம். என்ன இது என்று பார்த்தால் ஈராங்கி ஷர்மா தொடை அரிக்கிறது என்று கையை கீழே கொண்டு சென்றுள்ளார் என்று தெரிந்திருக்கிறது. அப்படி சினிமா எதுவுமே தெரியாமல் வந்த ரஜினிசார் முதல் பலருக்கு கலாகேந்திரா ஒரு சினிமா கற்றுக்கொடுக்கும் கல்லூரியாக இருந்துள்ளது” என்று சுவாரஸ்யாமாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் தந்தைக்கு நிகரான ஆசிரியர்” - கமல்ஹாசன் நினைவு கூரல்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
kamalhassan about balachander

தமிழ் சினிமாவில் 'இயக்குநர் சிகரம்' என போற்றப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர். தன் படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்தார். இதுவரைக்கும் 8க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளையும், தமிழக அரசு வழங்கும் கலைமாமணி, அறிஞர் அண்ணா விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கியவர். 

இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், “அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

Next Story

"அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்" - சரத்பாபு மறைவு குறித்து சுஹாசினி விளக்கம்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

suhasini about sarathbabu passed away

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

 

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சுஹாசினி, சுரேஷ் சந்த்ரா உள்ளிட்ட பிரபலங்கள் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். 

 

சரத்பாபுவின் உடல் தி.நகரில் இருந்து கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்பு கிண்டி மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 

இதனிடையே  சரத்பாபு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஹாசினி, "கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். காய்ச்சல் காரணமாக முதலில் 2 மாதம் பெங்களூருவில் இருந்தார். அவரின் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று அங்கு சென்றார். அந்த காய்ச்சல் குறித்து அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 மாதத்திற்கு பிறகு தான் 'மல்டிபிள் மைலோமா' (Multiple Myeloma) என்ற நோய் இருந்தது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 

பின்பு ஒரு நாள் நானும் நடிகர் சிரஞ்சீவியும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் பேசினோம். முடிந்தளவுக்கு காப்பாற்ற முயல்கிறோம் என நம்பிக்கை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவர் தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கங்களும் கிடையாது. அப்படி ஆரோக்கியமாக இருந்தும் இந்த 'மல்டிபிள் மைலோமா' என்ற நோய் நான்காவது கட்டத்தை எட்டிய பிறகு தான் தெரியவந்துள்ளது. இதனால் தான் அவரை நாம் இழந்துவிட்டோம். இனிமேல் உடலை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது ரொம்ப முக்கியம்" என்றார். 'மல்டிபில் மைலோமா' என்ற நோய் அரிய வகை புற்றுநோய் எனச் சொல்லப்படுகிறது.