Skip to main content

Exclusive : நான் ரெடி... நீங்க ரெடியா...? ராகவா லாரன்சுக்கு ஸ்ரீரெட்டி பதில் !

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
sri reddy

 

 

 

தெலுங்கு பட உலகில் கிளப்பிய புயலைத் தொடர்ந்து தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி 'தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், தான் ஏற்பாடு செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஸ்ரீரெட்டி அனைவரின் முன் நடித்தும், நடனமாடியும் தன்னை நிரூபித்தால், தான் அடுத்து இயக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

 

 

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியிடன் நாம் இதுகுறித்து கேட்டபோது.... "நான் எந்த படம் என்று சொல்வதற்கு முன்னால் அது 'ரிபெல்' படம் என்று லாரன்சிற்கு எப்படி தெரியும்...? இதில் இருந்தே தெரியவில்லையா அவருக்கு இதில் சம்பந்தம் உள்ளதா இல்லையா என்று. மேலும் அவர் தங்கியிருந்த கோல்கொண்டா ஹோட்டல் ஊழியர்களையும், படக்குழுவினரையும் கேட்டாலே தெரியும் அவர் அறையில் ருத்ராட்ச மாலையும், குரு ராகவேந்திரா சாமிகள் படம் இருந்ததா இல்லையா என்று. அது மட்டுமில்லாமல் என்னோடு சேர்ந்து என் தோழியும் இவரிடம் அதேபோல் பாதிக்கப்பட்டுள்ளார். வேண்டுமானால் லாரன்ஸ் அப்படி பிரஸ் மீட் வைக்கும் பட்சத்தில் அதில் என் தோழியும் கலந்துகொண்டு இன்னும் தெளிவுப்படுத்துவார். எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம் அதே குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு தெரியும் லாரன்ஸ் தவறு செய்தாரா இல்லையா என்று. ஒரு நாள் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

 

 

 

மேலும் அவர் என் நடிப்பு திறமையை பற்றி பேசியதற்கும், வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னதற்கும் அவரை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் பிரஸ் மீட்டில் நடிக்க வேண்டும் அவர் கூறியதை நான் சவாலாக ஏற்கிறேன். பிரெஸ் மீட்டிற்கு நான் ரெடி. அவர் ரெடியா..? மேலும் பிரஸ் மீட் அல்லாத தனி இடத்தில் வைத்துக்கொள்வதற்கும் நான் ரெடி. எனக்கு யாரையும் தண்டிக்க எண்ணம் இல்லை. அவரவர் செய்த தவறை அவரவர் உணர்ந்தாலே போதும். அதுபோல் லாரன்ஸ், நான் தப்பு செய்யவில்லை இருந்தும் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருகிறேன் என்று முன் வந்ததற்கு நன்றியும், அவர் தப்பு செய்ய வில்லை என்று சொன்னதற்கு மன்னித்து மறந்து விடுகிறேன். மேலும் எது எப்படியோ இவராவது கடைசியில் முன் வந்து என் காயங்களுக்கு மருந்து போடுவதுபோல் நடந்துகொண்டு எனக்கு வாய்ப்பளித்தால் கடவுள் இவரை ஆசிர்வதிக்கட்டும்" என்றார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை..! படங்கள் உள்ளே

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
sri reddy

 

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 விழாவில் தன்னை பற்றி பேசியபோது சிரித்ததற்கு அவரை சமூகவலைத்தளத்தில் கண்டித்து "கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது" என்று கோபமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகை ஹேமா குறித்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே... "ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்" என்று விமர்சித்திருந்தார். 

 

 

 

 

sri reddy


இந்நிலையில் தற்போது ஹேமா மீது கோபமடைந்த ஸ்ரீரெட்டி...."ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்" என்று சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது தெலுங்கு பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.