Skip to main content

''முதல்வர் அறிவித்த எக்ஸ்ட்ரா இரண்டு மணி நேர அவகாசம் யாருக்கும் தெரியவில்லை'' - இயக்குனர் எஸ்.பி.ஜனனாதன் காட்டம்!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
fsf

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் இயக்குனர் எஸ்.பி.ஜனனாதன் தற்போது அறிவித்துள்ள முழு ஊரடங்கு குறித்து சமூக ஊடகத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... 

 

''மக்களை தாக்கி வரும் கரோனா வைரஸ் மனிதர்களின் தொடுதல் மூலம் பரவுகிற குணத்தை கொண்டிருக்கிறது. இது முற்றிலும் புதுமையானது. இதனை மருத்துவ உலகம் எதிர்த்து போராடி வருகிறது. நிச்சயம் மருத்துவம் வெல்லும். இதுபோன்ற நேரத்தில் அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. கரோனா ஊடரங்கு பிறப்பிப்பற்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்துதான் மக்களை வீட்டுக்குள் அடைத்தது அரசு. அதன் பிறகு முழு ஊரடங்கு என்று சொல்லி, மதியம் இரண்டு மணிக்குள் நான்கு நாளுக்கு தேவையான பொருட்களை வாங்க மீண்டும் மார்கெட்டுகளிலும், கடைகள் முன்பும் சென்னை மக்கள் பெரும் திரளாக கூடினார்கள். முதல்வர் அறிவித்த எக்ஸ்ட்ரா இரண்டுமணி நேர அவகாசமும் யாருக்கும் தெரியவில்லை.

ம

இது எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை என்று புரியவில்லை. பல நாள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த மக்களை ஒரே நாளில் கூட்டத்திற்குள் நுழைத்து அந்த பல நாள் பலனை ஒரு நாள் கெடுக்கிற பணிதான் நடந்தது. இதற்கு முன்பு சுனாமி ஏற்பட்டபோது அது அந்தமான் நிக்கோபார் தீவின் கிழக்கு கடற்ரையை தாக்கி அதன் பிறகு 2 மணி நேரத்திற்கு பிறகுதான் இந்திய கிழக்கு கடற்கரையை தாக்கியது. இந்த 2 மணி நேரத்தில் அரசு சுதாரித்து உயிர்பலியை குறைத்திருக்க வாய்ப்பு இருந்ததாகவே நான் கருதுகிறேன். கடந்த கால தவறுகளை தவிர்த்து இந்த முழு அடைப்பு நீடிக்குமா இல்லையா, நீடித்தால் கடைகள் திறந்திருக்கும் நேரம் இவைகளை நாளைக்கே அறிவித்தால்தான் மீண்டும் மக்கள் ஆயிரக் கணக்கில் பதட்டத்துடன் கூடுவதை தவிர்க்க முடியும். அதை அரசு செய்யுமா என்பதே என் எதிர்பார்ப்பு'' என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச்சிலை திறப்பு! (படங்கள்)

Published on 26/12/2021 | Edited on 26/12/2021

 

மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் முழு உருவச் சிலை மற்றும் படத்திறப்பு விழா அடையாற்றில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் எஸ்.பி.ஜனநாதனின் உருவப்படத்தை இந்திய விடுதலை போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு திறந்து வைத்து புகழ் வணக்க உரையாற்றினார்.  

 

அவரது முழு உருவச் சிலையை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காணொளி வாயிலாகத்  திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே,பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு சி.மகேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

 

 

Next Story

எஸ்.பி.ஜனநாதன் மறைவு... லாபம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

laabam

 

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லாபம்'. இப்படத்தை, விஜய் சேதுபதியுடன் இணைந்து 'சவன் சி என்டர்டெயின்ட்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், லாபம் படத்தின் நிலை குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபம் படத்திற்கான அனைத்துப் பணிகளையும் எஸ்.பி.ஜனநாதன் முடித்துக் கொடுத்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள ஒரு சில பணிகளை படக்குழுவினர் நிறைவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில்,  'படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்தில்  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.